Headlines

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது இலங்கையில் சமாதானச்சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதோடு, வேலைவாய்ப்புப் பிரச்சினையும் கணிசமானளவு தீர்க்க முடியுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பு நெருக்கடி பற்றி கேட்ட…

Read More

சார்ள்ஸ் நிர்மலநாதன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்!

அமைச்சர் ரிசாத் மீது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்  அபாண்டங்களை சுமத்தியுள்ளமையை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்காக அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்சபை கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் அமைச்சர் ரிசாத் பற்றிய பேச்சு ஒரு தனி நபர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் அல்லாமல்  ஒரு…

Read More

மீற்றர் முறை அறிமுகம்

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி அளவில் இலங்கையின் சகல முச்சக்கர வண்டிகளையும் வாடகை வண்டிகளையும் உள்ளடக்கும் விதத்தில் மீற்றர் கட்டண அறவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் தூரத்திற்கு அமைய திட்டவட்டமான கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சின் பொறுப்பில் இயங்கும் நிறுத்தல், அளத்தல் தரச்சேவைகள் திணைக்களம் நிறைவேற்றவுள்ளது. வாடகை வாகன கட்டண அறிவீட்டு முறை தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Read More

இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் என்பது பொய்ப் பிரச்சாரமாகும்

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று முந்தினம் (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரவித்தார். கனேலந்தை ரஜமகா விகாரையின் அதிபதி சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்ம தஸ்ஸி…

Read More

இரு வாரங்களுக்குள் சூரிய மின்வலு நிலைமாற்ற திட்டம்

இலங்கையின் 200 வீடுகளை சூரிய மின்வலுவில் இயங்கும் குடியிருப்புக்களாக மாற்றும் தேசிய திட்டம் இரு வாரங்களுக்குள் அமுலாக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இந்தத் திட்டம் சூரிய மின்வலு நிலைமாற்ற திட்டம் என்று அழைக்கப்படவுள்ளது. இதன் கீழ் மூன்று முறைகளின் கீழ் பல்வேறு பொருளாதார மட்டங்களைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்ற வகையில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு குடும்பங்களும், தத்தமது வீடுகளில் சூரிய மின்வலு தொகுதிகளை பொருத்தி தேவையான மின்வலுவை…

Read More

ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளுக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனம்

ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு அடுத்த மாதம் நியமனங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இம்மாதம் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி 939 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளப் போவதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இலங்கையின் வரலாற்றில் ஆகக்கூடுதலாக ஆயுள்வேத பட்டதாரி மருத்துவர்கள் இணைத்துக் கொள்ளப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாக இருக்குமென அவர் கூறினார். புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகளில் 94 பேர் மத்திய அரசாங்கத்தின் கீழ்…

Read More

விவசாயிகளுக்கான சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவேன்

நெற்றி வியர்வை சிந்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். எம்பிலிப்பிட்டி புத்தி மண்டபத்தில் நேற்று (11) முற்பகல் நடைபெற்ற மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். வறுமை மற்றும்…

Read More

ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள்…

Read More

மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்

மனிதம் பேணும் மகாத்தான பணிக்கு என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடாத்தும் மாபெரும் இரத்தான முகாம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14-08-2016)காலை 9.00மணிமுதல் மாலை 3.30மணிவரை மருதமுனை மசூர் மொளலானா வீதியில் உள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை உறுப்பினர்களின் அணுசரணையில் நடைபெறவுள்ள இந்த இரத்ததான நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள்…

Read More

ஜனாதிபதிக்கு அறிக்கையை சமர்ப்பித்தது பரணமக ஆணைக்குழு

மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது இன்று தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

Read More

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் சாதனை

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் நடவடிக்கையினால் கடந்த 45 நாட்களுக்குள் 9000 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசணையின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விஷேட முற்றுகை பிரிவை ஸ்தாபித்தார்.

Read More

தகவலறியும் ஆணைக்குழு ; இம்மாத இறுதிக்குள் உறுப்பினர்கள் நியமனம்

-ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – தகவலறியும் ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு  ஆணைக்குழுவை நிறுவப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று   பிற்பகல் அரசியலமைப்பு பேரவை கூடியது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, சுயாதீன ஆணைக்குழுக்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் தகவலறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தொடரில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக தகவலறியும் உரிமைச்…

Read More