Headlines

காஷ்மீர் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை – பாகிஸ்தான்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வருட சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்காக சமர்பிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வெற்றியடையும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுத்து…

Read More

இணைந்து செயற்படத் தயார்!- சந்திரிக்கா

கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்லவும் யாருடன் வேண்டுமென்றாலும் இணைந்து செயற்பட தாம் தயார் என்றும்சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பில் வேட்டை ஆரம்பம்

கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ், இன்று திங்கட்கிழமை (15) முதல், விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புத் தரப்பினர், தேவையேற்படின், விமானப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றனர். போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம்…

Read More

நிகாப் அணிந்து, விமானம் ஓட்டும் முதல் முஸ்லிம் பெண் (படங்கள்)

-Ash-Sheikh TM Mufaris  Rashadi- முகத்திரை ( நிகாப் ) அணிந்து விமானம் ஓட்டும் முதல் முஸ்லிம் பெண் விமானி சகோதரி ஸஹ்னாஸ் லகாரி. ( பாகிஸ்தான் ) ஹிஜாப் மறைப்பது பெண்களின் அழகைத்தான் அறிவையல்ல.

Read More

நாசாவில் கடமையாற்ற, பலஸ்தீன சகோதரி தேர்வு

பாலஸ்தீன் ரமல்லாவில் நடந்த தேசிய அளவிலான PS தேர்வில் பாலஸ்தீன் ரமல்லாவை சேர்ந்த சகோதரி இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் வெற்றி பெற்றதை அடுத்து நாசாவில் கடமையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் சிறந்த ஓவியர் ஆவார். அவரது திறமையின் அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள நாசாவில் பணியாற்ற நாசா அழைப்பு விடுத்து இருந்தது என்பது குறிப்பிட்ட தக்கது.

Read More

மக்கள் காங்கிரஸுக்கும் மருதூர் அன்சாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும், அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் அக்கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இலங்கை மக்கள் காங்கிஸில் நாடளாவிய ரீதியில் கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பிக்கு மாத்திரமே உரித்துடையது எனவும்,…

Read More

போலி நிறைகள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் மீட்பு

போலியாக நிறையிடப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ஒருதொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் பேதுருதுடுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 100 கிராம் என நிறையிடப்பட்டுள்ள பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 85 கிராமாகவும், 190 என நிறையிடப்பட்ட பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 180 கிராமாகவும் இருந்ததாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனவே, அந்த பிஸ்கட் பக்கற்றுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த நிறுவனம் மற்றும் அதன்…

Read More

கைத்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி

இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

Read More

இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

ஒப்பந்த காலத்துக்கு மேல் சட்ட விரோதமாக பணிபுரிந்த 71 இலங்கை  பணிப்பெண்களை குவைத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Read More

பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வில் சையத் சகில் ஹிசைன்

தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் தெரிவித்தார். பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினமான இன்று (14) கொழும்பில் அமைந்துள்ள பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Read More

அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வ­ருக்­கான பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை

எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஐந்தாம் தரப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்­புக்கள், கருத்­த­ரங்­குகள் நடத்­து­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ளதாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 21 ஆம் திகதி புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. இத­னை­யிட்டே இத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி பரீட்­சார்த்­தி­க­ளுக்கு பிரத்­தி­யேக வகுப்பு, கருத்­த­ரங்கு, விரி­வுரை, பயிற்­சிப்­பட்­டறை, மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிட்டு விநி­யோ­கித்தல் மற்றும் பதா­தைகள் ஒட்­டு­வது, துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வழங்­கு­வது, தொலைக்­காட்சி வானொலி விளம்­ப­ரங்கள் ஆகி­ய­வற்­றுக்கு…

Read More