Headlines

பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேற்பார்வையாளர்களாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிபர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும், அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை…

Read More

வருட இறுதிக்குள் 1,210 பாலங்கள்

இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் 1, 210 பாலங்கள் அமைக்கப்படும் என மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த கிராம பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும். இதற்காக 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

நீதிபதியின் அதிரடி உத்தரவு: நாமல் அதிர்ச்சி!

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பலத்த எச்சரிக்கையின் மத்தியில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தவறான முறையில் பெற்றுக் கொண்ட 45 மில்லியன் பணத்தை தனது இரண்டு நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் செய்த சம்பவம் தொடர்பில் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்றையதினம் கொழும்பு நீதிமன்றில் நாமலை ஆஜர்படுத்திய வேளை, பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு வழங்கியிருந்தார். இதன்போது நீதிமன்ற…

Read More

முப்படைகளின் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பேன் ; ஜனாதிபதி

முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

மஹிந்த வர வாய்ப்பில்லை!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, அன்றையதினம் (ஆண்டுவிழா நாளில்) தனக்கு சர்வதே…

Read More

முஹம்மத் நிஷாத் குவைதில் வபாத்!

-ஹரீஸ் ஸாலிஹ் – மினுவாங்கொடையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நவ்ஷாத் அவர்களின் செல்வப் புதல்வர் 19 வயதுடைய முஹம்மத் நிஷாத் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் குவைத் நாட்டில் காலமானார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று  (22) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து,  குவைத் சப்ஹான் மையவாடியில் இடம்பெற்றது அல்லாஹ் அவரின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக..!

Read More

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி நாதன் காலமானார்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை உடையவர். 92 வயதான அவர் கடந்த ஜூலை 31ம் திகதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு…

Read More

நாடு கடத்தப்பட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜர்!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 6பேர் இலங்கைக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். அதற்கமைய இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த வேளைகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள் கடந்த மாதம் 21ம் திகதிகாத்தான்குடி கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில்தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசின் கோரிக்கமைய இவர்கள்அவுஸ்திரேலிய படகுகள் மூலம் காப்பற்றப்பட்டு மீண்டும்…

Read More

குறைவடைந்தது பணவீக்கம்

இந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் அமர சத்தரசிங்க இதனை தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி 0.7 சதவீதத்தாலும், உணவில்லா பொருட்களின் செலவுப் பெறுமதி 0.1 வீதத்தாலும் குறைவடைந்தமை இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் மரக்கறி, தேங்காய், உடன்மீன், சீனி, கோதுமை மா, அரிசி, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடைந்தன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பெறுமதியும்…

Read More

கவர்ச்சிமிக்க இடமாக கொழும்பு உருவாக்கப்படும்!

லண்டன், நியூயோர்க் மற்றும் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹொங்கொங்இ சிங்கப்பூர் மற்றும் டுபாய் என்பவற்றின் அனுபவங்களை பெற்று அதனை விட கவர்ச்சி மிக்க இடமாக கொழும்பு நிதி நகரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது: துறைமுகம், விமான நிலையம் மற்றும் நிதி நகரத்தை அண்டியதாக மாநகர திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எமது தேசிய பூகோள வரைபடத்தை மீள…

Read More

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அநுராதபுரம் மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக்  ரஹுமான் அவர்களின் முயற்சியின் பயனாக எமது மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் ஆலோசனையின்  அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன் நிகழ்வின்போது கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்  முஸ்லீம் பாடசாலை ஒன்றிற்கு அதிகளவான  நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்…

Read More

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால்  தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More