Headlines

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கீடு




அநுராதபுரம் மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக்  ரஹுமான் அவர்களின் முயற்சியின் பயனாக எமது மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் ஆலோசனையின்  அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன் நிகழ்வின்போது கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்  முஸ்லீம் பாடசாலை ஒன்றிற்கு அதிகளவான  நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும் எனக் கூறினார்.

  • 03 Store Building  – 35 million
  • 02 Store Building  – 20 million
  • 02 Store Technical Building – 25 million
  • Meager Repair – 28 million

அத்தோடு அடுத்த ஆண்டில் புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான கட்டிடம் மிக அவசியமாக காணப்பட்ட அநுராதபுரம் தேவனம்பியதிஸ்ஸபுரம் முஸ்லீம் ஆரம்பப்  பாடசாலைக்கு ரூபா  28 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *