Headlines

அஷ்ரப் ஹுஸைனின் மறைவு ஈடு செய்யமுடியாது. – அமைச்சர் றிஷாத் அனுதாபம்

சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூப்பெரியார் அஷ்ரப் ஹுஸைன் தனது வாழ் நாளை மக்கள் பணிக்காகவே பயன்படுத்தியவர். ஏழைகளின் துன்பங்களையும் அனாதைகளின் கஷ்டங்களையும் தீர்ப்பதற்காக அவர் பல்வேறு சமூக நலன் அமைப்புக்களின் முக்கிய பதவிகளிலிருந்து அவர்களின் வாழ்வு சிறக்க உதவியவர். திகாரிய அங்கவீன நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான…

Read More

முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி அமைச்சர் றிஷாத் வேதனை

-சுஐப் எம் காசிம் – சிறைச்சாலைகளில் முஸ்லிம் சகோதரர்கள் 28 சதவீதமானோர் தமது காலத்தை அவமே கழித்து வருகின்றனர். அதே வேளை கல்வித் துறையில் நமது சமூகத்தில் உயர் பதவி வகிப்போர் 3 சதவீதத்திலும் குறைவானவர்களாகவே காணப்படுவது கவலைக்குரிய விடயம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகன-ஹிஜ்ராபுர இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் தும்பர பள்ளிச் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். கல்விதான் நமது சமூகத்தின் அழியாத சொத்து….

Read More

இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை

துருக்கியில இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், அந்நாட்டு ஆட்சியாளர் எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை இருப்பதை உணரமுடிகிறது. முஸ்லிம் சகோதரர்கள் தமது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ள விடயங்கள், துருக்கிக்காக அவர்கள் கேட்கும் பிரார்த்தனைகள், இலங்கை முஸ்லிம் சார்பு ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான ஆதரவு, அரபுதெரிந்த சகோதரர்கள் தமிழுக்கு மொழிபெயர்த்து பதிவிட்ட குறிப்புக்கள் உள்ளிட்ட (பல காரணங்கள்) போன்றவற்றை அடிப்படையாக வைத்து நோக்குககையிலேயே இதனை அவதானிக்கமுடிகிறது.

Read More

இது அல்லாஹ் செய்த ஏற்பாடு – எர்துகானின் உணர்ச்சிமிகு உரை

துருக்கிக்காக துஆ செய்வோம்  மக்களால் வீழ்த்தப்பட்ட இராணுவ புரட்சி அர்துகானின் உரை. ஆயுத படையில் உள்ள சிறிய பிரிவினர் துரதிஷ்ட வசமாக துருக்கியின் ஒற்றுமையையும் மக்களையும் குறிவைத்து விட்டார்கள். இது படையை சுத்தம் செய்வதட்கு அல்லாஹ் செய்த ஏற்பாடு. இப்பொழுது நேரம் அதிகாலை 4.30 மணி இந்நேரத்தில் மில்லியன் கணக்கான துருக்கி மக்கள் பாதையில் இருக்கிறார்கள். நான் இத்தகைய நாட்டின் குடிமகன் என்பதையிட்டு பெருமை படுகிறேன். சட்டபூர்வ ஆட்ச்சியை கவிழ்க்க ஒன்றன் பின் ஒன்றாக முயறசிக்கிறார்கள். இவர்களுக்கு…

Read More

நாட்டில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கவில்லை

-எம்.ஆர்.எம்.வஸீம் – நாடு செல்லும் வீழ்ச்சிப்பாதையை தடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறாமல் நாட்டுக்கு பொருத்தமற்ற மாற்றங்களே இடம்பெறுகின்றன. என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த தேரர் தெரிவித்தார். தாய்நாடு எங்கள் அமைப்பு கொழும்பில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 30 வருட யுத்தத்தில் நாங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டோம். தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டை அபிவிருத்தி…

Read More

பிரான்ஸ் தாக்குதல் : லொரியின் சாரதி அடையாளம் காணப்பட்டார்

பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் லொரியின் சாரதியை பிரான்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த நபர் 31 வயதான  துனீஷியாவை பிறப்பிடமாகக்கொண்ட மொஹமத் லஹ்வீஸ் புஹ்லெல் எனப்படும் பிரான்ஸ் பிரஜையென தெரியவந்துள்ளது. இவர் சிறு குற்றங்களை புரிந்துவந்த, பொலிஸாருக்கு பரிட்சையமான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரான்ஸின் தீவிரவாத எண்ணம் கொண்ட நபர்களின் பட்டியில் இவர் உள்ளடக்கப்பட்டிருக்கில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தனியாக லொரியை செலுத்தினாரா? அல்லது இவருடன் வேறு யாரும் இருந்தார்களா?…

Read More

துருக்கியில் இராணுவப் புரட்சி : இலங்கையர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு

துருக்கியில் இராணுவப் புரட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்தை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே, துருக்கி தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புலில் வாழும் இலங்கையர்களுக்கான அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் அங்காராவில்…

Read More

இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது – துருக்கி

துருக்கியில் அந்நாட்டு அரசைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கை தோல்வி கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இருந்தும் ஆங்காங்கே மக்கள் எதிர்ப்புக் கோசங்களும் இடம்பெற்று வரும் நிலையில் புரட்சிக்கு முயன்றவர்கள் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள் என பிரதமர் ரெசெப் தையிப் எர்டோகன் எச்சரித்துள்ளார். எனினும், முக்கிய இராணுவ தளபதிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும், நாடு தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் குறித்த இராணுவ குழுவினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளணத்தின் தொழில் பயிற்சி கண்காட்சி

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளனம் நடாத்தி வரும்  தும்பர தொழில்பயிற்சி நிலையத்தில், தையல் பயிற்சி பெற்றுவரும்  யுவதிகளும், மின்னியல் துறையில் பயிற்சி பெற்றுவரும் இளைஞர்களும், தாருல் ரஹ்மான் அமைப்பைச் சேர்ந்த மாணவிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் நேற்று (15/07/2016) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்நிகழ்வு திகன இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

நாமலுக்கு ‘பாய்’ இல்லை

மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெட்ரஸ் வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெட்ரஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெட்ரஸ், அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்துகின்றார் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜே கூண்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதற்கு அண்மையுள்ள கூண்டுக்குள்…

Read More

முன்னாள் தூதுவர் உதயங்கவை கைதுசெய்ய நீதிமன்றில் கோரிக்கை

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். 2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை  மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு, 3 வது தடவையும் ரத்தானது ஏன்..?

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு மூன்றாவது தடவையும் ரத்தானது ஏன்..? Controversial Mumbai-based Islamic preacher Zakir Naik has cancelled his media interaction on Thursday for the third time. “It is very difficult to do a press conference. We will announce another conference soon. Naik himself is willing to come and share information with people,” official spokesperson of Naik’s…

Read More