Headlines

தங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை

தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவின் பூனே தொழிலதிபர் தத்தா புகே, மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பூனே அருகே உள்ள பிம்ப்ரியைச் சேர்ந்தவர் தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி சீமா, பூனே மாநகராட்சி கவுன்சிலராக கடமையாற்றிய வந்தார். 5 கிலோகிராம் நிறையில், கழுத்து, கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வந்துகொண்டிருந்தார் தத்தா புகே. கடந்த 2013ஆம் ஆண்டில், 3.25 கிலோகிராம் தங்கத்தில் சட்டையொன்றை உருவாக்கி…

Read More

வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை: ஸ்கைப் மூலம் ஜாகீர் நாயக் விளக்கம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின்…

Read More

தேசிய நுண்பாக நிதிச் சட்டம் விரைவில் அமுலுக்கு!

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வர்த்தமானியில் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்பாக Micro finance நிதிச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. ஏழை மக்களில் அதிமானோருக்கு, முக்கியமாக பெண்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நுண்பாக நிதிக் கடன் திட்டமானது இந்த நாட்டில் ஒரு கட்டுப்பாட்டின்…

Read More

அமெரிக்காவின் உதவிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் திரு.டொம் மாலினோவ்ஸ்கிக்கும், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முந்தினம் (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மற்றும் திரு. மாலினோவ்ஸ்கி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிச் செயலாளருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுச்சின்னமொன்றும்…

Read More

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் 17 இல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் யெம் (Tony Tan Keng Yam), மற்றும் பிரதமர் லீ சியென் லுல் (Lee Hsien Loong) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் நகர மநாட்டு நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின்…

Read More

உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ்!

மலேரியா மற்றும் யானைக்கால் நோய்களிலிருந்து விடுதலை பெற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைக் குறித்து அவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அடுத்த வாரம் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைகக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கையின் சுகாதார சேவை மற்றும் சர்வதேச ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் என்பவற்றினை கருத்தில் கொண்டே இவர்களது இவ் விஜயம் அமைந்துள்ளது. பிரதிநிதிகளின்…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக கோடீசுவர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எனவே, அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி விட்டார். இதற்கிடையே குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் தேர்வும் நடைபெற்றது. இந்த நிலையில் மைக் பென்ஸ் (57) துணை அதிபர்…

Read More

“முஸ்லிம் மாண­வர்­களை காலில் வீழ்ந்து, வணங்­கு­மாறு வற்­பு­றுத்த எவ­ரு­க்கும் உரிமையில்லை”

வத்­தளை, ராகுல வித்­தி­யா­ல­யத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண­வனை வகுப்­பா­சி­ரி­ய­ருக்கு கெள­ரவம் செய்யும் முக­மாக அவ­ரது காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­தி­ய­மை­யா­னது இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் சாசனம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு எதி­ரா­னது என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு தீர்ப்­ப­ளித்­துள்­ளது. தனது பிள்­ளையை வகுப்­பா­சி­ரி­யரும் பாட­சா­லையின் தேரர் ஒரு­வரும் காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தாக வத்­தளை அக்பர் டவுன் பகு­தியைச் சேர்ந்த எம்.ஆர்.எம். சஜானி இலங்கை மனித…

Read More

பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பிரான்ஸ் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இதுவரையில் இல்லையென பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே  இதனை தனது டவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதேவேளை பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்பதனை கண்டறிய பிரான்ஸிலுல்ல இலங்கை தூதரகம் தொடர்ந்தும்  உள்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

லஹிருவிற்கு பிணை!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டள்ளது. 7,900 ரூபாய் காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்க, கோட்டை நீதவான் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றக் கட்டளையையும் மீறி, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையானது எதிர்மாவரும் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது. இன்று பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரமகவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி பயணத்தை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சுயநல அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து…

Read More

கட்சித் தலைமையை விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்ற தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது  என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர  தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More