Headlines

பல பிரதேசங்களில் மின்சாரம் தடை

தென் மற்றும் சப்ரகமுவ மாகணங்களில் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக   இலங்கை மின்சார சபை தெரிவித்தது. குறித்த மின் தடையானது  சுமார் 40 நிமிடங்கள்  நீடித்துள்ளது. லக்ஷபான  மின் விநியோக பாதையில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமை  நிலைக்கு திரும்பியுள்ளது.

Read More

நான் ஜனாதிபதியாக வரவேண்டுமென, மக்கள் விரும்புகின்றார்கள் – கோதபாய

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட…

Read More

ஹப்புத்தளையில் அதிசக்திவாய்ந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த பொதியொன்று தொடர்பில், பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார்,  பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது குறித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்து, அவரின் உத்தரவுக்கமைய குண்டுகள் செயலிழக்கும்…

Read More

ඕස්ට්‍රේලියානු පාර්ලිමේන්තුවට පළමු වරට ශ්‍රී ලාංකික තරුණයෙක්

-නිලුපුලී – එළඹෙන ජූලි මස 02 දා පැවැත්වීමට නියමිත මැතිවරණය සඳහා පළමු වතාවට ඔස්ට්‍රේලියානු පාර්ලිමේන්තුවේ සෙනෙට් අසුනක් සඳහා තරඟ කිරීමට එරට කම්කරු පක්ෂයෙන් තරංග කිරීමට එහි වාසය කරන  ශ‍්‍රී ලාංකිකයෙකු වන ජගත් බණ්ඩාර දකුණු වේල්ස ශාඛාව වෙනුවෙන් නාමයෝජනා හිමිවී  තිබේ. එරට අඩු ආදායම්ලාභී කම්කරු ජනයාගේ වෘත්තීමය ගෞරවය ආරක්ෂා කරනු පිණිස ජගත් බණ්ඩාර පසුගිය කාලයේ කැපී…

Read More

FCID கலைக்கப்படாது

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) உறுதியளித்தது. இந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான அவசியம் இல்லை என்றும் இந்தப் பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடரும் என்றும் மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

Read More

முன்னாள் மேலதிக நீதவானுக்கான பிணை இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதமன்றத்தின் முன்னாள் மேலதிக நீதவான்  திலின கமகேவுக்கு, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால்  வழங்கப்பட்டுள்ள பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழக்கப்பட்ட விளக்கமறியலை இல்லாதொழிக்க கூடாது என்று சட்டமா அதிபர், திருத்திய விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே, மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார். இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று (13) பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

Read More

இலங்கை வரும் மார்க் ஜுகர்பேர்க்

பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும் இந்த வருடத்தின இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மற்றும் அதிவேக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோரின் ஏற்பாட்டினால் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் தொழில்நுட்பத்துறைக்கு தேவையான அறிவை வளர்க்க நாட்டில் புதியதொழில்நுட்பங்களை கொண்டு அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடனேயே இவர்கள் இங்கு வரவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தகவல்…

Read More

ஜனாதிபதியின் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்.

Read More

බස්නාහිර සියළුම ත්‍රී රෝද ලියාපදිංචිය අනිවාර්ය කෙරේ

– නිලුපුලී – බස්නාහිර පළාත තුල ධාවනය වන  ලක්ෂ පහක් පමණ වන සියළු ම කුලී ත්‍රිරෝද රථ, ත්‍රිරෝද රථ නියාමන වැඩසටහන යටතේ බස්නාහිර පළාත් මාර්ගස්ථ මගී ප්‍රවාහන අධිකාරියේ ලියාපදිංචිය අනිවාර්යය කර ඇති බව පැවසු එම අධිකාරියේ සභාපති නුවන් වනිගරත්න මහතා වැඩිදුරටත් කියා සිටියේ ලියාපදිංචි වන කුලී ත්‍රිරෝද රථ සඳහා මාස තුනක කාලයක් ලබා දීමට බලාපොරොත්තු වන…

Read More

வாடகை முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு கால அவகாசம்!

மேல் மாகாணத்தில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தையும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக வாடகை முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நுவன் வணிகரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்படும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான அடையாள அட்டைகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த மாவட்டத்திற்கான முச்சக்கரவண்டி என அடையாளப்படுத்துவதற்கான ஸ்ரிக்கர்களும்…

Read More

චීනයේ ෂැංහයි ජාත්‍යන්තර ගුවන්තොටුපොළේදී පිපිරීමක්

– නිලුපුලී – අද එනම් ( ජූනි 13)  චීනයේ ෂැංහයි ජාත්‍යන්තර ගුවන්තොටුපොළේදී ඇති වූ  පිපිරීමකින් මේ වන විට පුද්ගලයින් සිවු දෙනකු තුවාල ලබා ඇතැයි විදෙස් මාධ්‍ය වාර්තා පවසයි. ගුවන්තොටුපළේ ගොඩබැසීමේ පර්යන්තය අසල ඇති පරීක්ෂා කිරීමේ කවුළුවක් අසලදී එක්  පුද්ගලයකු බෝතලයකට පුපුරන ද්‍රව්‍ය දමා එය විසිකර ඇති අතර  සිද්ධියත් සමගම  බෝතලය විසිකළ පුද්ගලයා පිහියකින් සිය ගෙලට…

Read More