ஆண் சிசுவின் சடலம் மீட்பு.!
கண்டி, அம்பிட்டிய வீதியின் காண் ஒன்றில் இருந்து ஆண் சிசுவின் சடலத்தை இன்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கண்டிப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி, அம்பிட்டிய வீதியின் காண் ஒன்றில் இருந்து ஆண் சிசுவின் சடலத்தை இன்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கண்டிப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் இன்று வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை, பிழையாக வழிநடத்துக்கின்றனர். அரச வங்கிகள் ஒரு போதும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது அதனை பாதுகாப்பதற்கான அனைத்தையும் அரசு முன்னெடுக்கும்….
பாடசாலை அனுமதி கிடைக்காமல் உள்ள டாக்டர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதிப்படுத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய சங்கத்தினர் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே இந்த உறுதிமொழி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதென சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் நளின்த ஹேரத் மேலும் தெரிவித்திருப்பதாவது, இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை முடித்துக் கொண்டு…
சம்பூர் அனல்மின் நிலையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமென மக்கள் கருதினால் அதை நிர்மாணிப்பது பற்றி மீள்பரிசீலனை செய்வோம் எனவும் இது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கக் காத்திருக்கிறேன் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பயாகலை முதல் மக்கொனை வரையான கடல் எல்லையில் கடல் அலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் இப்பகுதியில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பயாகலைப் பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர். கடந்த 22 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பகுதி கடலில் நீராடிய இரு இளைஞர்கள் மக்கொனை, பயாகலைப் பகுதிகளில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். தென்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் கடலில் நீராடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் நேற்று இரவு சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிரணியினர் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை கையளித்தனர்.
காணி, சுற்றுலாவளத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
75 இலட்சம் ரூபா இலங்கை நாணயத் தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய், சார்ஜாவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 44 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் கர்ப்பிணிகள் 4 மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தமிழ் உறவினர்களை பார்க்க மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்லாட்சி அரசாங்கத்தின் கவனிப்பும் அமோகமாகவுள்ளது. ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்கறை கொள்ளாதிருக்கின்றாரென பொது பல சேனா அமை ப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்….