Headlines

ஜனா­தி­பதி, பிர­தமரை இன்று சந்­திக்­கிறார் செயிட் அல் ஹுசைன்

இலங்­கைக்கு நான்கு நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை இன்­றைய தினம் (9) சந்­திக்­க­வுள்ளார். இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னு­டைய இலங்­கை விஜ­யத்தின் இறுதி நாள் இன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­திக்­க­வுள்ளார்….

Read More

மியான்மரின் அடுத்த அதிபர் யார்?

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்…

Read More

வெள்ளை மாளிகையிலும் வை-பை என்றால் பிரச்சினை தான்

உலகின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்காவின் அதிகாரத்தை பறைசாற்றும் இடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை. ஆனால்  அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை-பை சரியாக இல்லை என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒபாமா அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “வெள்ளை மாளிகையிலேயே பல இடங்களில் வை-பை இணைப்பு கிடைப்பது இல்லை. பழமையான கட்டிடமான வெள்ளை மாளிகையில் ஏராளமான பகுதிகளில் சுத்தமாக வை-பை வேலை செய்வதில்லை.”  என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இணையத்…

Read More

சிறையில் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு – அறிக்கை கோரும் அமைச்சர்

சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ஷ மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ஷ, சில தினங்களுக்கு முன்னர் தனது உறவினர்களை சந்தித்து விட்டு சிறைக்கூண்டுக்கு திரும்பும் வேளையில் அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல் ஒன்று கீழே விழுந்துள்ளது. சிறை விதிகளின் பிரகாரம் எந்தவொரு கைதியும் மொபைல் போன் பயன்படுத்த முடியாது. எனினும் யோஷித்த நவீன வகை மொபைல் போன் ஒன்றை சிறைக்குள்…

Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் – சுஷ்மாவிடம் றிஷாத் வலியுறுத்து

பல தசாப்த கால­மாக இலங்­கையில் புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கி­றது. அதனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்லிம் மக்­களின் அபி­லா­சை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும். இதனை இந்­தியா உறுதி செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத் தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான றிஷாத் பதி­யுதீன் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் வேண்­டுகோள் விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் கடந்த சனிக்­கி­ழமை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மாவை…

Read More

கூகுள் பலூன் செயல்திட்டம் வெகுவிரைவில் இலங்கையில்

அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக கூகுள் பலூன் செயல்திட்டம், இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக,தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும், பதுளை மாவட்ட எம்.பி.யுமான ஹரின் பெர்ணன்டோ குறிப்பிட்டார். அதிவேக இணைய சேவைகள் தொடர்பாக, அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேற்படி, இணையசேவைகள் குறித்து, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளோம். இத்திட்டத்தின் பிரகாரம், நாட்டின் பலபாகங்களிலும் பாரிய ஹிலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டு,சோதனைகள் நடாத்தப்படவுள்ளன. இதன் முதலாவது சோதனை, இம்மாத இறுதியில் இரத்மலானையில் நடைபெறும் எனவும் அவர்…

Read More

முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்

கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்காக வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும், இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்காத நிலையில், அவர்களுடைய பெயர் விவரங்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியினர் தெரிவித்துள்ளனர். குறித்த முன்னணியின் தலைவரால் இந்த பெயர்ப்பட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மஹிந்த கையொப்பமிட்டார்

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Read More

நாளை ஞானசாரவின் வழக்கு; சட்டம் தனது கடமையை செய்யும்

ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார…

Read More

றிஷாத் பதியுதீன் பவுன்டேசன்; கொழும்பு முஸ்லிம் மாணவா்கள் கல்வி ஊக்குவிப்பு

– அஸ்ரப் ஏ சமத் – அமைசச்சா் றிஷாத் பதியுதீன் பவுண்டேசனினால் கடந்த (6) ஆம் திகதி கொழும்பு புதுக்கடை சந்தியில் கொழும்பு வாழ் 500 மத்ரசா மாணவா்களுக்கிடையே பேச்சு மற்றும் குர்-ஆன் மனனம் கசீதா, ஆங்கில சிங்கள பேச்சுத் திறன்களை வெளிப்படுத்தி போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தப்பட்டது. அதில வெற்றி பெற்ற சகல மாணவா்களுக்கும் அமைச்சா் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சா் அமீா் அலி ஆகியோாினால் சின்னங்களும் சான்றிதழ் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கொழும்பு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா்…

Read More

நாளை பிரியங்கரவிடம் விசாரணை

இலங்கை விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை (9) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இலங்கை கென்டரின் நிறுவனம் மற்றும் இலங்கை விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் நாளை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த மோசடி தொடர்பில் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்னவிடம்  விசாரணை நடத்தப்பட்டதோடு , குறித்த…

Read More

7 வயது சிறுவனுக்கும் 6 வயது சிறுமிக்கும் திருமணம்; பாகிஸ்தானில் 6 பேர் கைது

பாகிஸ்­தானில் 7 வயது சிறு­வ­னுக்கும் 6 வயது சிறு­மிக்கும் திரு­மணம் நடத்தி வைத்த குற்றச்­சாட்டில் ஆறு பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மேற்­படி சிறார்­களின் பெற்றோர் மற்றும் திரு­மண வைப­வத்தின்  சாட்­சி­க­ளான 6 பேரும் பாகிஸ்தானின் கிழக்குப் பகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டனர் என சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­யான  சைஃபுல்லா கான் தெரி­வித்­துள்ளார். இவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டால் 6 மாத சிறைத்­தண்­டனை மற்றும் 50,000 பாகிஸ்தான் ரூபா அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்­தானில்…

Read More