Headlines

ஹுஸைன்- மைத்திரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

Read More

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்துக்கு அண்மையில் உள்ள இரண்டு வீதிகள், இரும்பு கம்பிகளான தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்களுக்கு வருகைதந்தவர்களை தவிர, வேறு எவரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன்  கலகம் அடக்கும் பொலிஸாரும் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர். பட உதவி: லங்காதீப

Read More

ஹுஸைன்-ரணில் சந்தித்துப்பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று(9)  இடம்பெற்ற சந்திப்பின் பொது எடுக்கப் பட்ட படங்கள்.

Read More

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 60ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள்…

Read More

பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் சரத் பொன்சேகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு சென்று, மக்களுக்கு சேவையாற்ற முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக…

Read More

திருட்டு மின்­சாரம் தொடர்பில் நட­வ­டிக்கை

அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின் ­சாரம் பெறுவோர் மீது இலங்­கை மின்சாரசபை சட்ட நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. சமீ­ப­கா­ல­மாக அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின்­சாரம் பெறு­வோர் தொடர்பில் இலங்கை மின்­சார சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றதன் ஊடாக அம்­பாறை மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­க­ளிலும் சட்­ட­வி­ரோ­த­மாக மின்­சாரம் பெறு­வோர்கள் சுற்றி வளைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். கொழும்­பி­லி­ருந்து வருகை தரும் விசேட மின்­சார சபை குழு­வினர், பிராந்­திய மின்­சார சபை ஊழி­யர்கள், பிர­தேச பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகியோர் இணைந்து…

Read More

ஜூனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடைபெறும்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது. இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்­போ­டப்­ப­ட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள…

Read More

நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

நேபாளி காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் இன்று (9) காலமானார். அவருக்கு வயது 79. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். விமான கடத்தல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறைகளில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த இவர், கடந்த 10-2-2014 அன்று நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். நேபாளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம்…

Read More

அரசதுறை நிறுவனங்களில் வெற்றிடங்கள் பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை

– ஆர்.கிறிஷ்­ணகாந் – பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அர­சாங்க நிறு­வ­னங்­களில் 17000 தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு பொருத்­த­மான தகு­தி­யு­டைய பட்­ட­தா­ரி­களை தேர்வு செய்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழு தொடர்­பான அறிக்­கை­யொன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள்  இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்து விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு…

Read More

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு…

Read More

ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை முன்னேற்றம்

ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதன் பிரகாரம் பூச்சியம் புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 100 புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளாகவும் பட்டியலிடப்படுகின்றன. இந்த ஆண்டின் பட்டியலில்’ இலங்கை 37 புள்ளிகளைப் பெற்று 83வது .இடத்தில் உள்ளது….

Read More

பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை

ஊழல் மோசடிகள் குறித்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளக விமானப் பயணங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை சில் ராஜபக்ச பயன்படுத்தியதாகவும், இதற்காக பல கோடி ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடம் நேற்று (8) ஜனாதிபதி…

Read More