Headlines

மீளவும் விண்ணப்பங்கள் கோரும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு  தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

Read More

இலங்கையில் பலூன் வழி கூகுள் இணையம்!

இன்று (16) முதல் பலூன் வழி கூகுள் இணைய வசதியை பயன்படுத்தும் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இணைய சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பலூன் வழி இணைய சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து…

Read More

புத்துயிர் பெறுகிறது லசந்த படுகொலை விசாரணை!

சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பொலிஸார் மேலும் சிலரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருப்பதாகத் தெரியவருகின்றது. லசந்தவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புலனாய்வுப் பொலிஸ் குழு நுவரெலியா மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் ஒருவர் உட்பட பத்துப் பேரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிச்சை ஜேசுதாசன் என்பவர் மரணமடைந்ததையடுத்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரின் கிராம…

Read More

சரணடைந்த பிக்குகள் அடையாள அணிவகுப்பு

ஹோமாகம பொலிஸில்  சரணடைந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ…

Read More

விபத்தில் இளைஞர் பலி : இருவர் படுகாயம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மண்முனை சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 27 வயது ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொக்கடிச்சோலை பக்கமிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனை பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27…

Read More

இன்று நீதிமன்றத்தில் ஞானசார தேரர்

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இஸ்ரேலில் பலஸ்தீனர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

இஸ்ரேல் பலஸ்தீன் இடையே தொடர்ந்து பிரச்சினை வலுத்து வருகிறது. நேற்று (15) ஜெருசலம் பழைய நகர் பகுதியில் பலஸ்தீனர்கள் 2 பேரை இஸ்ரேலிய போலீசார் சுட்டுக்கொன்றனர். முன்னதாக நேற்று முன்தினம் (14) மாலையில், மேற்கு கரைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலஸ்தீனர்கள் 2 பேரை சுட்டுக்கொன்றனர். அதே போல் மேற்குகரையில் உள்ள சோதனை சாவடி அருகே பலஸ்தீனர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Read More

வாள்முனையில் இஸ்லாம் பரவவில்லை – விவேகானந்தர்

இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்’ குர்ஆன் 2:256 இந்த வசனம் இறங்கிய வரலாற்றை சற்று பார்போம். நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பு மதினாவில் ஒரு பழக்கம் இருந்தது. குழந்தைக்கு ஏதாவது நோய் வந்து விட்டால் அன்றைய சிலை வணங்கிகள் ‘எனது குழந்தைக்கு நோய் குணமாகி விட்டால் அந்த குழந்தையை யூதனாக்கி விடுகிறேன்’…

Read More

சவூதிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ராணுவ துணைத் தளபதி மசூத் ஜஸாயெரி தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்,  “”சிரியாவில் கிளர்ச்சியைத் தூண்டும் நாடுகளின் எண்ணம் ஈடேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்தப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தால் அதற்குத் தகுந்த பதில் நடவடிககைகளை மேற்கொள்வோம்” என்றார் அவர்.

Read More

வெளிநாட்டு நிதிக்கான வங்கி வைப்பில் சிக்கலில்லை

வெளிநாட்டு நிதியை இலங்கையின் வங்கிகளில் வைப்பிடும் போது, புதிய சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்படுவதாக கூறப்படும் செய்தி மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிதாக இவ்வாறான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறி இருந்தார். இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவின் பணிப்பாளர் எச். அமரதுங்க, வெளிநாட்டு நிதியை இலங்கையின்…

Read More

உணவு விசமானதால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலை உணவு விசமானதால்  20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(15) காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விசமடைந்ததாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 8 மற்றும் 9 வயதான மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட பின் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் , அவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

23 ஆம் திகதி அமைச்சராகும் பொன்சேகா

– லியோ நிரோஷ தர்ஷன் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது.  எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். (vk)

Read More