Headlines

லசந்த கொலை தொடர்பில் மேலும் 10 பேரிடம் விசாரணை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த பிச்சை ஜேசுதாசன் வசித்து வந்த கிராம சேவைப் பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜேசுதாசனுடன் தொடர்புகளைப் பேணியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது….

Read More

வரதட்சணைக்கு எதிராக ஜே.வி.பி களத்தில்

இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் எக்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று (14) பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் கல்வி, தொழில் இல்லா பிரச்சினையுடன் காதல் பிரச்சினையும் காணப்படுகின்றது. பணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது….

Read More

சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோஷித!

சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத்தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும்…

Read More

“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…

Read More

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…

Read More

தௌஹீத் ஜமாஅத்தை கொச்சைப் படுத்திய சிங்கள பாடகர் மீது விசாரணை

பிரபல சிங்களப் பாடகரான ஹிராஜ் மீது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிராஜினால் அண்மையில் வெளியிடப்பட்ட ”மனுசதா” என்ற பாடல் தொடர்பிலேயே இந்த விசாரணை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை விசாரிக்குமாறு (11) கொழும்பு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் செய்யப்பட்ட வழக்குத்தாக்கல் மீதான விசாரணை நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹிராஜ் மீதான விசாரணைக்கான…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு ரூ. 8 பில்லியன்

புதிய இலத்திரனியல் அடையான அட்டையை வழங்குவதற்காக 8 பில்லியன் ரூபாய் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார்.

Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கைது

ருவன்வெல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முறையற்ற விதத்தில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு உதவி புரிவதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் 8500 ரூபாய் பணத்தினை இந்தப் பொலிஸ் அதிகாரிகள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5000 ரூபாய் பணத்தினை இந்த பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், மிகுதிப் பணத்தை பெற முற்படுகையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை…

Read More

மரக்கறி விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் நாட்களில் மரக்கறி விலை மேலும் உயரலாம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மரக்கறி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படாமை காரணமாக கூடிய விலை கொடுத்து உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வருகிறார்

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார். நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ 03 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நியூசிலாந்து முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்ற விவசாய வேலைத் திட்டங்களை நியூஸிலாந்து பிரதமர் ஆரம்பித்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர இலங்கையிலுள்ள நியூஸிலாந்து…

Read More

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இன்று (12) காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் இன்று மதியம் நாடு திரும்பக் கூடுமென்று எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சி

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று  5% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர் ஈரான் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன் ஈராக்கும் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.இந்த நிலமையே எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும்.

Read More