Headlines

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார். குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

ஆடம்பர வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்ற பாடகி

“Love and Hip Hop” பாடகி, நியா லீ (Nyalee) தனது ஆடம்பர இசையுலக வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்றார். “நான் உண்மைகளை அறிவதற்காக பதில்களை தேடினேன். அதை இஸ்லாத்தில் மிக அழகாக கண்டுகொண்டேன்.” Instagram பக்கத்தில் தனது மாற்றத்தை வெளியிட்டுள்ள இவர், இது இரண்டுவருட தேடலின் முடிவாகும் என்று கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு, அல்லது அதன்படி வாழ்வதற்கு உரிமையுண்டு. இது எனது சொந்த முடிவாகும் என்றும் கூறியுள்ளார் நியா லீ. Love…

Read More

இலங்கையில் முதலிட தீர்மானித்துள்ளோம் – சவூதி இளவரசர்

”உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் ”கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016” நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 இல் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவுத் இன்று (27) நாட்டிற்கு வருகை தந்தார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சவூதி தீர்மானித்துள்ளதாகவும் இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்வதன் மூலம் தம் நாட்டினை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சவுதி இளவரசர் தெரிவித்தார்.

Read More

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தே, பலஸ்தீனர்கள் தாக்குகின்றனர் – பான் கி மூன்

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அண்மையில் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தானது தீவிர வாத இஸ்ரேலுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)

நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில்  தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More

அமைச்சர் றிஷாதின் நேற்றைய பாராளுமன்ற உரை

– ஊடகப்பிரிவு – நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிவோர் நேர்மையைக் கடைப்பிடிப்பதனாலேயே, அந்த நாடு இன்று கூட்டுறவுத்துறையில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (27)மாலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டுறவுத் துறை தொடர்பான கேள்வியொன்றை எட்வேட் குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் எழுப்பிய போது அமைச்சர் றிஷாட் அதற்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு…

Read More

ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம்

பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்தததஸ்ஸி மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரர், வரலாற்றுக் காலம் தொட்டு நாட்டில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளின்…

Read More

சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைவு

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேனக டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியதுடன், 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இவர்கள் இருவரும் கடந்த அரசாங்கத்தினால் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது. சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியுடன்…

Read More

சிங்களவர்களிடமே மத்திய அரசின் பலம்: வாசு

இலங்கையில் “மத்திய அரசின்” பலம் சிங்களவர்களான பெரும்பான்மை இனத்திடம் உள்ளது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நிராகரிக்க முடியாது என  மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.  ஒற்றையாட்சிக்குள் நாடு பிளவுபடும் என்ற கூட்டமைப்பின் “வாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Read More

பெண் பொலிஸாரின் தங்குமிடத்துக்குள் புகுந்த கான்ஸ்டபிள் குறித்து விசாரணை

பெண் பொலிஸார் தங்கும் தங்­கு­மி­டத்­துக்குள் களா­வாக நுழைந்­த­தாக கூறப்­படும் அம்­பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் கான்ஸ்­டபிள் தொடர்பில் அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் அலு­வ­லகம் ஊடாக விசேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் டி.ஆர்.எல்.ரண­வீ­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

Read More

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிப்பு

கடந்த வருடத்தை விட வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த வருடம் வாக்காளர்களின் எண்ணிக்கை 15,421,201 ஆக காணப்பட்டதோடு 2014 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 15,047,490 ஆக காணப்பட்டதாகவும் தேர்தல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த வாக்காளர் எண்ணிக்கையில் இந்த வருடம் பாரிய அதிகரிப்பு காணப்படுவதோடு இதன் எண்ணிக்கை 373,712 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பட்டியல் மூலம் இந்த நாட்டில் அதிகமாக…

Read More

இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

– Abdul Wahid Mohamed Mahroof – எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லா விட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். 1998-2000 ம் ஆண்டு வரையான…

Read More