Headlines

எரிபொருள் விலை தொடர்பில் பேச்சு : பிரதமர்

எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார். உலக பொருளாதார நிலை, எமது பொருளாதாரத் திட்டங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இது தொடர்பில் ஆராய வேண்டுமென குறிப்பிட்ட அவர் எரிபொருள் விலை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவுள்ளதாகவும்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பரிசோதனை

இலங்கைக்கு வரும் பயணிகள்   ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க  கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் மேலும் ,இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஸிகா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறன்றமை…

Read More

தெமட்­ட­கொடை விபத்து: தாய், மக­னுக்கு பிணை

தெமட்­ட­கொடை பகுதியில் மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயையும் மக­ளையும் காரில் வேக­மாக வந்து மோதி உயி­ரி­ழக்க செய்த சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 15 வய­து­டைய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகி­யோரை பிணையில் செல்ல நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அத்­துடன் பாதிக்­கப்­பட்ட தரப்­பான கொல்­லப்­பட்ட பெண்ணின் மூத்த மக­ளுக்கு 2 இலட்சம் ரூபா கருணைக் கொடை வழங்­கவும் நீதி­மன்றம் சந்­தேக நபர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டது. குறித்த விபத்தின் போது காரை செலுத்­தி­ய­தாக கூறப்­படும் 15 வய­து­டைய…

Read More

ரயில் மோதி ஒருவர் பலி

கம்பஹா ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெம்முல்ல ரயில் பாதையின் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. பெம்முல்ல ரயில் கடவையில் காவலாளியாக கடமையாற்றிய அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே ரயில் மோதுண்டு  உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது

Read More

கல்­மு­னையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ சோனியாவா?- அப்றாவா?

கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ த­ன­து ­கு­ழந்­தை தான் எனக்­கோ­ரி­ வ­ழக்­குத்­தாக்கல் செய்­த­தா­க­ கல்­மு­னை­யைச் ­சேர்ந்த எஸ்.ஜெய­ரா­சா ­தெ­ரி­வித்தார். கல்­மு­னைப் ­பொ­லிஸார் கண்­டு­பி­டித்த இச்­சி­று­மி­ சி­று­வர் ­நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வி­னூ­டா­க­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் பாது­காப்­பு­ புக­லி­டத்­திற்­கு ­அ­னுப்­பி­ வைக்­கப்­பட்டார். தற்­ச­மயம் 16 வயது நிரம்­பிய இச்­சி­று­மி­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் புக­லி­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இச்­சி­று­மிக்­கு ­உ­ரி­மை ­கோரி…

Read More

இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகால அவகாசம்

இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்களை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார். இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் சட்டப்படி பஸ் உரிமையாளர்கள், இவ்வாறான சுவரொட்டிகளை தமது பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று கெமுனு கோரியுள்ளார். ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் அரசியல் சுவரொட்டிகளை பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தனியார்…

Read More

ஹோமாகமயில் பிக்குமார் “காட்டு தர்பார்” – புத்திஜீவிகள் கடும் கண்டனம்

ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பொதுவில் இந்தச் செயற்பாடு பௌத்த பிக்குமார்கள் அனைவருக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் ஒரு விடயமாகி விட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கொழும்பு முன்னாள் பிரதம மஜிஸ்ரேட்டும், நீதிச்சேவை அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளருமான ஜீ.டீ. குலதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் சட்டத்தை நீதிமன்றம் அமுலாக்கும் போது அதற்கு தடை ஏற்படுத்தி ஆஜராகும்…

Read More

இலங்கைக்கு துருக்கி நாட்டுத் தூதுவர் எச்சரிக்கை

ஐ.எஸ் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜயா ஒகசுகதார் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நான்கு இலட்சத்து எழுபத்தியோராயிரத்திற்கு மேற்பட்ட படைப்பலத்துடன் உலகின் 10வது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளதும் உலகின் 17ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதுமான துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கான பிரத்தியேக…

Read More

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும்!

எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி  இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பாடப்படவுள்ளது. இதற்கான…

Read More

இலங்கை சந்தைக்கு BMW இன் புதிய அறிமுகம்

BMW இனது இலங்­கைக்­கான ஏக விநி­யோ­கஸ்­தர்­க­ளான Prestige Automobiles ஆனது, BMW i3 –மற்றும் BMW i8 என்­ப­வற்றை உள்ளூர் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்கு மேல­தி­க­மாக, BMW Group Asia உடன் இணைந்து BMW i சார­தி­க­ளுக்கு 360o ELECTRIC program இனையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.BMW i ஆனது BMW i3 மற்றும் BMW i8 ஊடாக நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய புத்­தாக்­க­முள்ள வாக­னங்­க­ளையும் நகர்வுச் சேவை­க­ளையும் உரு­வாக்­கு­வதில் தன்னை அர்ப்­ப­ணித்­துள்­ளது. BMW i3 ஆனது capable of achieving zero…

Read More

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார…

Read More

டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More