Headlines

அகமதுவை ஃபேஸ்புக் அலுலகத்துக்கு அழைக்கும் FACEBOOK மார்க்!

இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள் கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கிறார் சிறுவன் அகமது. இவர் கைக்கடிகாரம் ஒன்றை தானே செய்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றததற்காக போலீஸாரால் கைவிலங்கிடப்பட்டவர். எல்லாம் ‘பெயர்க்காரணம்’ என சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ரத்தினச் சுருக்கமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தனது ஸ்டேட்டஸை நிரூபித்துள்ளார். இதோ அந்த…

Read More

கொழும்பில் உள்ள நீதிமன்றங்களில், இன்றுமுதல் புலனாய்வு அதிகாரிகள்

கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் புலனாய்வு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் சித்திக் என்ற நபரை, வெளியார் ஒருவர் நீதிமன்றத்தில் சந்திக்க, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செயற்படும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தயங்காது…

Read More

மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் மக்கா நோக்கி புறப்படுகிறார்கள்

வத்தளை – மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் இன்று 21 ஆம் திகதி அந்த 17 பேரும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் பிற்பகல் 2.10 மணிக்கு மக்கா செல்ல இருக்கிறார்கள்  (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) இந்த ஹாஜிகள் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள்..!!

Read More

சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்

கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற  ஐந்து வயதுடைய சிறுமியை 2016 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்பில் இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு மினுவாங்கொட ரோமன் கத்தோலிக்க பாடசாலை இக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு சிறுமி சேயாவை முதலாம் தரத்தில்…

Read More

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் மணிக்கூட்டுக்கோபுச்சந்தியில் இப்போராட்டம் நடாத்தப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாத 1200 பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார். ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்,பெண் வேலையற்ற பட்டதாரிகள் பங்கு கொண்டனர். புதிய அரசாங்கமே வேலை வழங்கு,…

Read More

ஜனாதிபதி சு.க. எம்.பி.க்களை இன்று சந்திக்கின்றார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஐ.தே.முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியினரை சந்திக்கும் முதலாவது கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சுதந்திரக் கட்சியினரும் மற்றும் எதிர்க் கட்சி வரிசையில் அமரத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும்…

Read More

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு பெறும் வகையில் இந்­தியா, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது என்று அரச தொழில் முயற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். சர்­வ­தேச தரத்­துடன் கூடிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கான கதவு தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அமெ­ரிக்கா பிரே­ர­ணைக்கு பல…

Read More

சிறுமி சேயா படுகொலை சந்தேகநபர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன் பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இரு சந்­தேக நபர்­களும் விஷேட மரபணு பரிசோதனைக்கு (டீ.என்.ஏ.) உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அதன்­படி சந்­தேக நபர்­களின் உயி­ரியல் மாதி­ரி­களைப் பெற்று பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி, சிறுமி சேயா செதவ்­மியின் சட­லத்தில் இருந்து பெறப்­பட்ட…

Read More

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் -பைசர் முஸ்தபா

அடுத்த வருடம் நடத்துவதற்கு என உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகள் சுயாதீனமாக இயங்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. உள்ளுராட்சித் தேர்தலும் தொகுதி அடிப்படையில் நடத்தப்படுவதே பொருத்தானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டிமல்வத்தை பீட மகாநாயக்கரை சந்திக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

கம்பஹாவில் மேலும் ஒரு அதிர்ச்சி: 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்: பாட்டன், மாமா கைது

கம்பஹா, கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற ஐந்து வயதுடைய சிறுமி, கொடூ­ர­மாக பாலியல் துஷ்பிரயோகம் செய்­யப்­பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கம்பஹா, கனேமுல்ல பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் சிறுமியின் பாட்டன், மாமா மற்றும் இளைஞன் ஆகியோர் கனேமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை…

Read More

ஐ.நாவின் அறிக்கைக்கு நாடாளுமன்ற விவாதம் கோருகிறார் வீரவன்ச

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நியமிக்குமாறு ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்று கோரப்படவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நிறுவுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேநேரம் சீபா உடன்படிக்கை தொடர்பாக தொடர்ந்தும் நாம் எதிர்ப்புகளை வெளியிட விரும்புகின்றோம். எவ்வாறாயினும், சீபா உடன்படிக்கை…

Read More

ஆட்சி மாறியிருக்காவிடின் நாடு மோசமடைந்திருக்கும்

ஜனவரி-8இல் இந்த நாட்டில் மாற்றம்ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை மோசமடைந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், மார்ச் மாதம் நடை பெற்ற ஐ.நா.  மனித உரிமைகள் சபையின் 28ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் முன்னாள் ஆட்சியாளர்கள் பலருக்குப் பயணத்தடை விதிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இராணுவப் பிரதானிகள் சிலருக்கும் இப்படியான நிலைமை…

Read More