கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதிரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரிசோதனை
கொட்டதெனியாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் துனேஷ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா பொரளை ஜீன் டெக் நிறுவனத்தில் நேற்று விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். நீர்கொழும்பு சிறைச் சாலையில் இருந்து சிறை அதிகாரிகளால் பொரளையில் உள்ள ஜீன் டெக் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு விசேட மருத்துவ நிபுணர்களால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொண்டயா எனப்படும் சந்தேக நபரின் உடலின் பல…
