Headlines

24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்தனர். தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் கைப்பற்றிய பொலிஸார்,  அவர்களை நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சேயாவின் தந்தை, கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி அறிக்கை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையின் இரத்தமாதிரி அறிக்கையும் கைது செய்யப்பட்டுள்ள கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி  அறிக்கையும் இன்று மினுவன்கொடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அஷ்ரப் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து, கவனம் செலுத்துமாறு கோரிக்கை

ஒலுவில் அஷ்ரப் நகரிலிருந்து 2011ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஐ தே கட்சி தலைமையிலான இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே நகரில் மீள் குடியேற்றப்படாமல் தட்டழிந்து திரிவது கவலை தருவதாகும் என உலமா கட்சி தெரிவித்தள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி  தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களாக ஒலுவில் அஷ்ரப் நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் இராணுவ முகாம் அமைக்கப்போவதாக கூறி 2011ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை அப்போதே பகிரங்கமாக…

Read More

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, பிணையில் செல்ல அனுமதியுங்கள் : சந்தேக நபர்கள் கோரிக்கை

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்….

Read More

எம்.பி.க்களின் கொலைகைள விசாரிக்க குழு – ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது கொல்லப்பட்ட தி.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், த.மு. தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் கொலைச்சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழேயே இந்தக் குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ்…

Read More

“வெலே சுதா”விற்கு மரண தண்டனை!

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14)  இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரபல போதைப் பொருள் கடத்தல் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள “வெலே சுதா” எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று(14) அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக இக்குறித்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய…

Read More

வெலே சுதா தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பு இன்று

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன அறிவித்துள்ளார். 2008ம் அண்டு டிசம்பர்…

Read More

இலங்கையில் பத்திரிகை சுயதணிக்கை குறித்து ஆராய்வு

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுயதணிக்கையை வலுப்படுத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிங்கள, ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

Read More

புதிய போக்குவரத்து முறை இடைநிறுத்தம்

கொழும்பு –  இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

Read More

90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படும் சாத்தியம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உப தலை­வரும் முன்னாள் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை சுட்டு படு­கொலை செய்­தமை, தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சியின் தலை­வ­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) 90 நாள் தடுப்புக் காவல் விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுக்கும் சாத்­தியம் உள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரிவிக்­கின்­றன. கடந்த ஞாயி­றன்று கைது செய்­யப்­பட்ட அவ­ரிடம் முன்னாள் எம்.பி….

Read More

மஹிந்­தவை சந்­தித்த சீனப் பிர­தி­நிதி

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சீனாவின் உப வெளி­வி­வ­கார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை கொழும்பில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்பு ஒரு வழ­மை­யான சந்­திப்பு என முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்­ள­தாக ‘தென் சீனா மோனிங் போஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக்ஷ அதி­காரம் இழந்­ததன் பின்னர் சீனத் தலைவர் ஒருவர் முதல் தட­வை­யாக அவரை சந்­தித்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும். இலங்­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டை­யி­லான உறவை வலுப்­ப­டுத்தும் நோக்கில்…

Read More

சிறு­பான்மை மக்­களின் வாக்குகளாலே தோற்றோம்

சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் அடித்­த­ளத்தை இழந்­ததன் கார­ண­மா­கவே ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­யது எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன, அடுத்த பொதுத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான முன்­ன­ணியை வெற்­றி­பெறச் செய்­வ­தற்­கான சீர­மைப்­புக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். இரத்­தி­ன­பு­ரியில் அண்­மையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ஜோன் சென வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப…

Read More