கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கு ஜப்பான் நிதி
ஜப்பானின் கீழ்மட்ட மனித பாதுகாப்புத் திட்டத்திற்கான நன்கொடை உதவி வழங்கும் பொருட்டு வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசு 801,311 அமெரிக்க டொலர்களை (108 மில்லியன் ரூபா) வழங்கியுள்ளது. நன்கொடை ஒப்பந்தம் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகநும மற்றும் HALO Trust நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டமியன் ஒபிரைன் ஆகிய இருவரும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்தில் நேற்று கைச்சாத்திட்டனர். இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம் HALO Trust நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கண்ணிவெடியால் பாதிப்படைந்த பிரதேசங்களை…
