மேர்வின் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தில் நடைபெற்ற காணி விற்பனையொன்று தொடர்பாகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஆட்சியின் போது களனி பிரதேச சபைக்கு உரித்தான காணியொன்றை மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளரான சிங்கப்பூர் சரத் என்பவரும் இணைந்து போலி உறுதிப்பத்திரம் தயாரித்து, விற்பனை செய்துள்ளனர். ஒரு காணித்துண்டு 25 லட்சம் ரூபா வீதம் 31 காணித்துண்டுகள்…
