Headlines

மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் அகற்றப்பட்டது

மரத்தில் இருந்து விழுந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்த பலகைத் துண்டு 6 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவனொருவன்தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ளதுடன்அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்துள்ளார்.இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின்  நெஞ்சில் பாய்ந்துள்ளது. தற்போது அறுவைச் சிகிச்சை மூலம் மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் துண்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்போது கொழும்பு…

Read More

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில் காலி துறைமுகத்திற்கு வந்த ஆணைக்குழு உறுப்பினர்கள், பொலிஸாரின் கண்காணிப்பில் இருக்கும் அவன்காட் கப்பலுக்குள் சென்றனர்.

Read More

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – மேர்வின்

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா தலைமையில், பசு வதையை தடை செய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மிருகவதைக்கு எதிராக பல செயற்பாடுகளைச் செய்து கடந்த காலங்களில் மேர்வின் சில்வா பிரபல்யமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமான சேவை அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

– றிஸ்வான் சேகு முகைதீன் – ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) காலை ஆஜரானார். தற்போது, ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், குறித்த விடயம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல்

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெறுகின்ற முற்போக்கு சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – பொலன்னறுவை பாதை (photo)

மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பொலன்னறுவை- மட்டக்களப்பு எல்லைக்கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு பாதையின் நாமல்கம மற்றும் பிள்ளையாரடி பகுதிகளில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது. இதன் காரணமாக வெலிக்கந்தை வரையான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதற்கிடையே வெலிக்கந்த பகுதியில் உள்ள சியம்பலாகஸ்வெவ…

Read More

புத்தளம்- மன்னார் போக்குவரத்திற்குத் தடை

புத்தளம் – மன்னார் பிரதான வீதி தற்போது மூடப்பட்டுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எளுவங்குளம் பகுதியில் கலாஓயா பெருக்கெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, எளுவங்குளம் பகுதியில் பாலத்திற்கு மேல் நீர் பெருக்கெடுத்து செல்வதினால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், எளுவங்குளம் பாலம் எவ்வித பாதுகாப்பும் இன்றி காணப்படுகின்றமை, பல்வேறு அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே…

Read More

பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்

பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில், பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக பிரி­யசாத் டெப் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டுள்ளார். உயர் நீதி­மன்ற நீதிவான் தேவிகா லிவேரா தென்­னக்கோன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­வா­னாக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்ட நிகழ்வும் இந்த சந்­தர்ப்­பத்தில் இடம்­பெற்­றது. ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி. அபேயகோனும் நிகழ்வில் பங்கேற்றி ருந்தார்.

Read More

இளைஞர் பாராளுமன்ற கல்முனை தொகுதி வேட்பாளர்கள் (photos)

– ஏ,பி.எம்.அஸ்ஹர் – நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலு ள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.

Read More

விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பங்­கெ­டுக்கச் செய்ய வேண்­டு­மென நான் எனது அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை. மாறாக தேவை­யெனில் விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நா­டு­களின் தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற பரிந்­து­ரை­யையே முன்­வைத்தேன் என்று காணாமல் போனோர் குறித்து விசா­ரணை செய்யும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்­றங்கள் குறித்த இறுதி அறிக்­கையை தயா­ரித்த போது எனக்கு எந்­த­வி­த­மான சவாலும் இருக்­க­வில்லை. உண்­மையைக்…

Read More

விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளன.

Read More