Headlines

கனடாவில் பள்ளி வாயலுக்கு தீ வைப்பு

கனடாவின் தலைநகரிலுள்ள “மஸ்ஜிதுல் ஸலாம்” எனும் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிவாசலினுள் எவரும் தங்கியிருக்கவில்லை. எனினும் இந்த தீ வைப்பு சம்பவத்தினால் பள்ளிவாசல் உடமைகள் முற்றாக எரிந்து விட்டதாகவும், இதன்மூலம் பள்ளிவாசலுக்கு சுமார் 12 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர். தீ வைப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் இது “பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக” இருக்கலாம் என பள்ளிவாசல் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

Read More

அமைச்சர் றிஷாத் அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு தொடர்ந்தும் நான் அழுத்தங்களை கொடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை )  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான  றிஷாத்  பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.  இங்கு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நானாட்டான் பிரதேச அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…

Read More

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில், அடம்பனைச் சேர்ந்த கே.ரஜீவனுக்கு நேற்று அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பதையும்,அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனையும் படத்தில் காணலாம்.

Read More

மன்னாரில் வெள்ளம் : போக்குவரத்து பாதிப்பு

– வாஸ் கூஞ்ஞ – மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  மழை காரணமாகவும் வெளி மாவட்டங்களிலிருந்து உள்நோக்கி வரும் மழைநீர் காரணமாகவும் மன்னார் பகுதியில் பல வீதிகளிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாந்தை மேற்கு பகுதியிலுள்ள பாலியாறு பகுதியில் வீதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வீதிகளை மேவி பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் இப் பகுதியில் வெள்ளாங்குளம் பகுதியில்…

Read More

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk (link is external) மற்றும் www.exams.gov.lk (link is external)ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Read More

பிரான்ஸ் படுகொலை சம்பவம் : அமைச்சர் றிஷாத் அனுதாபம்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்றிடம்பெற்ற துயரச் சம்பவத்தை அறிந்து மிக வேதனையும் கவலையும் அடைவதாக தெரிவித்துள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உலக நாடுகள் மத்தியில் அமைதிமிக்க நாடாக வர்ணிக்கப்படும் பிரான்ஸில் நேற்று வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 150க்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பது பெரும் துயரத்தை தோற்றுவித்துள்ளது. பரிஸ் தலைநகரத்தை…

Read More

பெப்சி வடிவில் மது: சவூதியில் சம்பவம்

நேற்று(12\11\15)  துபாயிலிருந்து சவூதி அரேபியா வந்த லாரியில் 48,000 பெப்சி கேன்கள் வந்தது, முதலில் பெப்சி என்று நினைத்த சுங்க துறை அதிகாரிகள் அதை உற்று பார்க்கும்போது தான் தெரிந்தது போலியான பெப்சி கவர்கள் என்று. பிரித்து பார்த்தபோது அனைத்தும் மது கேன்கள். மேலும் விரிவான செய்திக்கு saudigazette.com.sa

Read More

அரசியல் கைதிகளின் விடுதலை?

அரசியல் கைதிகள் நிபந்தனை பிணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதனை முழு விடுதலையாக கருத முடியாது என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

அவன்கார்ட் ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்றனர்

அவன்கார்ட் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். கடற்படையினரிடம் அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், காலி துறைமுக சூழலில் அவன்கார்ட் மற்றும் மஹாநுவர ஆகிய கப்பல்களில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தளபாடங்களை கடற்படையினர் இன்று பரீட்சிததனர். கடற்படையின் உயர் அதிகாரி ஒருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆயுதங்களை பொறுப்பேற்றுக்கொண்டன.

Read More

சோபிததேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : பிரதமர்

சங்கைக்குரிய அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபிததேரரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கள் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுகின்றது. சோபிததேரர் ஏதேனும் ஓர்…

Read More

வளவை கங்கையில் முதலையிடம் சிக்கிய பெண் மாயம்!

வளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண், வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஜெமீல் பதவியேற்பு

– அஸ்ரப் ஏ சமத் – அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஜெமீல் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி கொழும்பு -2 நவம் மாவத்தையில் உள்ள அரச வா்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமைகளை ஏற்றுக் கொண்டாா். இந் வைபவத்தில் அமைச்சா் றிஷாத், அமைச்சா் பைசா் முஸ்தபா, பிரதியமைச்சா் அமீா் அலி, மற்றும் அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். இந் நிறுவனம் பற்றி பொதுமுகாமையாளா் தெரிவிக்கையில்…

Read More