Headlines

அவன்கார்ட் ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்றனர்




அவன்கார்ட் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கடற்படையினரிடம் அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில், காலி துறைமுக சூழலில் அவன்கார்ட் மற்றும் மஹாநுவர ஆகிய கப்பல்களில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தளபாடங்களை கடற்படையினர் இன்று பரீட்சிததனர்.

கடற்படையின் உயர் அதிகாரி ஒருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆயுதங்களை பொறுப்பேற்றுக்கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *