Headlines

தபால் திணைக்களப் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளருடனேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி கடந்த 13ம் திகதி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இன்று இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர்…

Read More

மட்டுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டுயானை புகுந்து கைவரிசையினை மீண்டும் காட்டியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, நேற்று (16) அதிகாலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது அரிசி ஆலையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. யானைகளின் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் நாளாந்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனை அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் அச்சமின்றிய வாழ்க்கையினை தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

மீன் ஏற்றுமதி தடை நீங்கும் சாத்தியம்?

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று கடற்றொழில் அமைச்சரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய இந்த இலங்கை வந்துள்ளது. ஐரோப்பாவின் இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கொழும்பு வந்தது. நால்வரடங்கிய இந்தக் குழுவில் இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித்தொழிலை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து…

Read More

யோசித்தவின் தொலைக்காட்சி நிலையத்தில் பல மணித்தியால சோதனை

ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் (கடற்படை அதிகாரி) யோசித்தவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர். கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் இந்த தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது. இந்தநிலையில் சோதனையின்போது பல கணணிகள், மடிக்கணணி ஒன்று என்பன விசாரணைகளின் நிமித்தம் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கை கடுவெல நீதிமன்ற அனுமதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முற்பகல் 10…

Read More

மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளனர்: மஹிந்த

மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேகமாக வாழ்க்கை செலவு உயர்கின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணித்து செயற்படுவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமை, மஹேன்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில அமைச்சர்கள் கூறுவதனை…

Read More

பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி; உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

பிரான்ஸ் தலை­ந­க­ரான பாரிஸில் கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து உலக பொரு­ளா­தாரம் பாரிய பின்­ன­டைவை சந்­திக்கும் என பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இந்த தாக்­குதல் கார­ண­மாக ஐரோப்­பாவின் சுற்­று­லாத்­துறை பாரிய வீழ்ச்­சியை சந்­திக்க கூடிய சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது. பாரிஸ் நகரம் ஆயுததாரி­க­ளின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னதை தொடர்ந்து ஐரோப்­பாவில் மேலும் பல நக­ரங்­க­ள் பயங்­க­ர­வா­தி­களின் தாக்குதலுக்கு இலக்­காக கூடும் என்று இரா­ணுவ உள­வுப்­பி­ரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐரோப்பா நோக்கி…

Read More

ஐ.எஸ். களுக்கு எதிராக மாபெரும் சைபர் தாக்குதல்: இணையப் போராளிகள் எச்சரிக்கை

பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள் மற்றும் ஹேக்கர்களின் குழு யூடியூப் வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல மூலைகளிலும் செயல்பட்டுவரும் இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் முகத்தில் ‘கய் ஃபாக்ஸ்’ முகமூடியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘உங்களுக்கு எதிரான மாபெரும்…

Read More

மகாத்மாவை படுகொலை செய்தவனுக்கு இந்தியாவில் வீரவணக்கம்!

இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று இந்து மகாசபை வீரவணக்கம் செலுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவன் கோட்சே. அவன் 1949ஆம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிடப்பட்டான். கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று நாடு முழுவதும் இந்துமகாசபை ‘வீரவணக்க’ நாளாக கடைபிடித்தது. தமிழகத்திலும் இந்து மகாசபை பெயரில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. இது…

Read More

தென்­னா­பி­ரிக்கா பய­ண­மானார் சந்­தி­ரிகா

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ளார். “ஐக்­கிய நாடுகள் அமை­தியை கட்­டி­யெ­ழுப்பும் நிதியின் பொறுப்­புக்­கூறல்” என்ற தொனிப்­பொ­ருளில் தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­றவுள்ள கருத்­த­ரங்கு ஒன்றில் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உரை­யாற்­ற­வுள்ளார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இலங்­கையின் சமா­தானம் நல்­லி­ணக்கம் மற்றும் நம்­பிக்­கை­யெ­ழுப்­பு­தலில் பெற்­றுள்ள அனு­ப­வங்கள் என்ற தலைப்பில் உரை­யாற்­ற­வுள்ளார். இதே­வேளை இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்பில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்க அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இலங்­கையில் எவ்­வாறு இந்த உண்­மையை கண்­ட­றியும்…

Read More

ஐ.எஸ். தாக்குதல்கள் விரைவில் இலங்கையில்  இடம்பெறலாம் BBS

– க.கமலநாதன் – தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார். மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது…

Read More

வெள்ள பாதிப்பு: அமைச்சர் றிஷாத் அதிகாரிகளுக்கு உத்தரவு

வவுனியா மாவட்டத்தில், வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் (16) கைத்தொழில், வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில், அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற, வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை தொடர்பான கலந்துரையாடலின்போதே…

Read More

36 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More