Headlines

மர்மபொருள் இன்று மாலை 6.30 க்கு விழும்

விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில்  விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது….

Read More

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 348 தொகுதிகளை கைப்பற்றி ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில்…

Read More

அமீரலியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அரசாங்க அதிபர்

– அபூ செய்னப் – கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்த முறையற்ற விதத்தில் ஆற்றுமண் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தேவையான மண்ணை பெற்றுக் கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அபிவிருத்தி குழுக்களும் பெரும்பாலும் அதிக தொகை பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது இதற்கான அடிப்படைக்காரணம் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் மணல் அகழும் முகவர்கள் அதிக…

Read More

மஹிந்தவிற்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி,  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுடன்,  அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழ்வரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபையே  கொழும்பு வர்த்தக…

Read More

வடக்கு தொடருந்து போக்குவரத்து வழமைக்கு

ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது. இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4…

Read More

களவாடிய 30ஆயிரம் டின் மீன்கள் மீட்பு

ரத்தொலுகம வீடமைப்பு திட்டத்தின் அங்காடியொனறில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 47 இலட்சம் பெறுமதியான 30ஆயிரம் டின் மீன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த டின் மீன்கள் நீர்க்கொழும்பு – கிபுலாபிடிய பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இருந்து திருடப்பட்டவை என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ரத்தொலுகம பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

நிறவெறி கொண்ட Apple Store ஊழியர்கள் (video)

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பின மாணவர்கள் அவமதிக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலானதையடுத்து ஆப்பிள் நிறுவனம் அச்சிறுவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மேரிபைர்னாங் பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடை ஒன்றிற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மாணவர்கள் 6 பேர் கடந்த செவ்வாய் அன்று சென்றுள்ளனர். அப்போது, கருப்பின மாணவர்களை நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு “நீங்கள் உள்ளே இருந்தால், மற்றவர்களுக்கு நீங்கள் ஏதாவது திருடிவிடுவீர்களோ என்ற அச்சம் இருக்கும்” என்று…

Read More

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

– க.கிஷாந்தன் – தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் 12. ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 13.11.2015 அன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதிலும் அவசர விடயங்களில் ஈடுப்படுவதிலும் முடியாமல் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது…

Read More

தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு அ.இ.ம.கா. ஆதரவு வழங்கும்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –  சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார். புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை…

Read More

விழப்போகும் மர்மப்பொருள்! காத்திருக்கும் விஞ்ஞானிகள்

இலங்கையின் தென்பகுதிக் கடலில் இன்று காலை விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர். WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மர்மப் பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய அப்பலோ 10…

Read More

ஞானசார தேரரின் ரகசிய குர்ஆன் வகுப்பு

புனித அல்குர்ஆனை களங்கப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர். இவர்மீது இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் பதியப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருவதும் பலரும் அறிந்ததே. இந்நிலையில், அல்குர்ஆன் விளக்கமும் அது பற்றிய அறிவும் போதாத நிலையில், அல்குர்ஆனை அவமதித்த வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஞானசார தேரர், தற்போது அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களில்  ரகசியமாக குர் ஆணை பற்றி தெரிந்து வருவது  குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. தனக்கு…

Read More

சவூதியில் வருகிறது தடை!

துபாயை தொடர்ந்து சவூதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More