Headlines

ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அறிவிப்பு

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்தில், இலங்கை முஸ்லிம்களும், இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என்ற தோரனையில் இனவாதிகள் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன்…

Read More

அம்பாறை மாவட்டத்தில் மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதம்

– பைஷல் இஸ்மாயில் – அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (03) சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது. அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டு காணப்படுகின்றது.

Read More

“இஸ்லாமிய நோக்கில் நம்பிக்கைத் துரோகம்” – என்.எம். அமீன்

– முகம்மட் பஹாத் – எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுக்கும் விஷேட அறிக்கை… ஜனநாயக நாடான எமது நாட்டில் பல்வேறுபட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. தாம் விரும்பும் வேட்பாளளர்களைத் தெரிவு செய்வது அவரவர் உரிமையாகும். ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் வாக்களிப்பதில் அசிரத்தையாக நடந்து கொள்ளவும் கூடாது. வாக்களிப்பது ஓரு ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது…

Read More

பொதுபலசேனா உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு

பொது ஜன பெரமுனவின் (பொதுபலசேனா) உறுப்பினருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது. இனவாதக் கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்குமுகமாக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது ஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த குமாரசிங்கவுக்கு எதிராக சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான ஆர்.ஆர்.ரி சட்டத்தரணிகள் அமைப்பு இம்முறைப்பாட்டை செய்துள்ளது.

Read More

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்ககப்பட்ட மக்களுக்கு உதவுமாறு றிஷாத் பதியுதீன் வேண்டுகோள்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பெளிசியிடம் கிழக்கில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை செய்யுமாறு-அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள். தற்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் சூறாவளியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடத்தில் வேண்டியுள்ளார். இன்று காலை முதல் கிழக்கில் காணப்படும் சீரற்ற கால நிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் தங்களது அமைச்சின்…

Read More

முஸ்லிம்கள் குடுக் காரர்களுக்கு, அங்கீகாரம் வழங்கக்கூடாது – ஹலீம்

ரனில் இருக்கும் வரை ஐ.தே.க.யால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியவர்களது மூற்றுக்களையும் ‘மகாரஜா’ என்றழைக்கப்பட்டவர்களது கூற்றுக்களையும், சிந்தித்தால் அரசியலின் வினோதங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்று தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். மடவளை சந்தியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- அரசியல் அரங்கு மிக வினோதமானது. அதில் எதுவும் நிச்சயமற்றது. ஒரு காலத்தில் இனி மகிந்த ராஜபக்ஷவை…

Read More

அ.இ.ம.கா. கருத்தரங்கில் மு.கா. ஆதவாளர்களால் குழப்பம்

– முனையூரான்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மானை ஆதரித்து கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் நேற்று மாலை (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கில் மு.கா. ஆதவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கூச்சல் குழப்பத்தால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்களான எஸ்.எஸ்.பி. மஜீட், அன்வர் முஸ்தபா, மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் கலந்துகொண்ட இக் கருத்தரங்கில் பெரும்…

Read More

நாமல் ராஜபக்ஸவுக்கு, டியூசன் கொடுக்க தயாராக இருக்கிறேன் – சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வு இல்லை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமையினால் அவருக்கு மேலதிக வகுப்புக்களை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். பொது மக்களின் பாதுகாப்பு அரசியல்வாதிகளின் பொறுப்பு.  நாங்கள் செய்யும் நல்ல வேலைகளினால் பொறாமையில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல் தங்கள் பாடங்களை மாத்திரம் கற்றுக்கொள்ளுமாறு அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சாதாரண மக்களின்…

Read More

பிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்போர்கள்

*குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் குழந்தைக்காக ஏங்கி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..! கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து , பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை க்ளோஸ்-அப்பில் போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர், ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட அப் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்….

Read More

சவூதி வேலை சம்மந்தமான வழக்குளில் இனி உடனடி தீர்ப்பு!

சவுதியில் வீட்டு வேலை மற்றும் கம்பெனி வேலை சம்மந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினையை தினமும் சந்திக்கிறார் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர சவுதி தொழில் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி: வீட்டு வேலையில் சம்பளம் மற்றும் பிற பிரச்சினைகள் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் 5 நாட்களில் அவருடைய sponsor முன்நிலையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் அப்படி வழக்கு முடியவில்லை என்றால் வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்நிலையில் 10…

Read More

ரெட் புல் ஹராம்!

ரெட் புல்லில் ஏதோ ஒரு இறந்த மிருக இரத்தம் கலப்படம் செய்து ரெட் புல் தயாரிக்கப்படுவதை ரெட் புல் அடைப்பானிலே பொதிக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் நீங்களும் இதனை ஆராய்ந்து பாருங்கள் , உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். பெருமைக்கும் ஸ்டைலுக்கும் ரெட் புல் பருகும் நபர்கள் அதிகம் இருக்கிறார்கள் இது உமையோ பொய்யோ அது இரண்டாவது விஷயம் , ஆனால் இவ்வாறான எனர்ஜி பானங்களில் சேர்க்கப்படும் கூட்டுக்களை நாமும் சற்று சோதனை செய்து பார்த்தால் நமக்குத்தானே…

Read More

யெமன் முஸ்லிம்களுக்கு உதவிகளை வாரி வழங்கும் கட்டார்

யெமனில் அமைதி திரும்பி கொண்டிருக்கும் நிலையில் போரால் பாதிக்க பட்ட யெமன் முஸ்லிம்களுக்கு மனித நேய உதவிகளை சவுதி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் செய்து வருகின்றன சவுதியின் இராணுவ விமானங்கள் உணவு பொருட்களையும் மருந்து பொருட்களையும் யெமனின் அதுன் நகரில் குவித்து வருகிறது அது போல் தற்போது கட்டார்  நாடும், யெமன் முஸ்லிம்களின் துயர் துடைக்க ஏரளமான மனிதாபிமான உதவிகளை வாரி வளங்கி வருகிறது மனித நேய உதவிகளுடன் கத்தர் நாட்டின் விமானம் யெமன் நாட்டின் அதுன்…

Read More