Headlines

இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபா கடன்காரா்களாக உள்ளனா் -சஜித்

– அஸ்ரப் ஏ சமத் – அண்மையில் அமைச்சரவையில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தல விமான நிலையத்தில் உள்ள கட்டிடத்தினை ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு பாவிப்பதற்கு ஒரு அமைச்சா் அமைச்சரவை பத்திரம் தயாரித்திருந்தாா்.. ஆனால் அதனை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள வில்லை. இது தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த அபிவிருத்திகள். இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபா கடன் காரா்களாக உள்ளனா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவிப்பு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாழும்…

Read More

நான் கல்வி அமைச்சரானால்..! அல்ஹாபில் எம்.ஆர்.எம். முனவ்வர்.!!

இன்று (5.8.2015) இடம் பெற்ற 8ஆம் தர இரண்டாம் தவணைப் பரீட்சை தமிழ் மொழி வினாத் தாளில் கேட்கப்பட்ட வினாவுக்கு மாணவனொருவன் எழுதிய விடை என்னை வெகுவாக கவர்ந்தது. “இலவசக் கல்வி சகலருக்கும் கிடைக்க வழி செய்வேன். கல்வியின் தரத்தை உயர்த்துவேன். புதிதாக பாடசாலைகளை உருவாக்குவேன். பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக் கொடுப்பேன். ஆசிரியர், அதிபர் சம்பளங்களை கூட்டுவேன். தேவையான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவேன். தொழில் நுட்ப கல்வியை விஸ்தரிப்பேன். பல்கலைக் கழகங்களை உருவாக்குவேன். பல்கலைக் கழகத்துக்கு அனுமதிக்கப்படும்…

Read More

ஜெனிவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை வரும்

இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான முறையில் முகங்­கொ­டுக்­கும்.தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் விசேட பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து அதற்­கான உரிய தீர்­வினை முன்­வைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்லிம் கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செயற்பட்டு நாட்டை முன்­ந­கர்த்தி செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். என்னை தோற்­க­டிப்­ப­தற்கு 2005 இல் பிர­பா­க­ர­னுடன் மஹிந்த ராஜ­பக் ஷ உடன் ப­டிக்கை செய்­து கொண்­ட­மையின்…

Read More

காதலனை தேடும் சீ.சீ.டி.

புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்­யப்­ப­டவில்லை. இந்நிலையில் அப்­பெண்ணின் இர­க­சிய காத­லனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வரு­கின்­றனர். குறித்த பெண்­ணுடன் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஒன்­றாக இருந்­த­தாக கூறப்­படும் யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே பொலிஸார் இவ்­வாறு தேடு­வ­தா­கவும், அவர் குறித்த பெண்ணை கொலை செய்­தி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ்…

Read More

கத்தார் சகோதரர் இர்பானின் அனுபவம் இது

ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்) கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில் வண்டியிலிருந்து இறங்கி வீதியின் ஓரமாக இருந்த கப்டேரியாவில் உழுந்து வடையும், தேனீரும் அருந்தி விட்டு வெளியேறும் வேளையில் இஷாஹ் தொழுகைக்கான அதான் ஒலித்தது பக்கத்திலிருந்த கெபின் சிறிய பள்ளிவாயலில் தொழுது விட்டுச் செல்லலாம் என எண்ணி பள்ளிவாயலுக்குள் நுழைந்தேன். ரமளானில் ஒவ்வொரு நாளும் குர் ஆனின் ஒரு சிறிய பகுதியை ஓதி…

Read More

தேசிய அரசிலாவது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா?

– ரஸீன் ரஸ்மின் – தேசிய அரசிலாவது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா? மாகாண சபை, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறோம். எனவே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதுதான் ஒரு கேள்வியாகும். இன்;று ஒரு வித்தியாசமான அரசில் கலாசாரத்தை நோக்கி தேசிய அரசியல் நகர்ந்து செல்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அணியினர் மக்களை குழப்பத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தேர்தல்…

Read More

“மு.காவை  எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” – அமீர் அலி

– அஹமட் இர்ஸாட் – அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு கல்குடா தொகுதியில் அதிகரித்து வருக்கின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது இதற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அமீர் அலி:- மட்டக்களப்பில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரைக் கூட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போரளியாக காண முடியாது. அதனால்தான் இம்மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வீழ்ச்சி ஆரம்பமாகியிருக்கின்றது. அதனோடு சேர்த்து கல்குடாவின் பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்யும்…

Read More

பாராளுமன்ற உறுப்பினராவதற்கு மஹிந்த ஆசைப்படுவது ஏன் தெரியுமா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறார் என்று ஜே.வீ.பி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, தாஜூதீன் கொலை வழக்கின் விசாரணை நடைபெறும் போது மகிந்த ராஜபக்ச நடுங்குகிறார். ஏன் எனில் அந்த இலக்கு எங்கு செல்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கிறது. திவிநெகும குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ச இருக்கிறார். எவன்கார்ட் பிரச்சினை மற்றும் மிக் வானுர்தி கொள்வனவு ஊழலில் கோட்டபய…

Read More

மகிந்தவை எதிர்கொள்ள சந்திரிக்காவும், சோபித தேரரும் குருநாகலில் பிரச்சாரம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 8ம் திகதியன்று இவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அடிப்படையில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளனர். அத்துடன் பல கூட்டங்களையும் அவர்கள் குருநாகலில் நடத்தவுள்ளனர். எனினும் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இந்தநிலையில் சந்திரிக்கா மற்றும் சோபித தேரரின் நடவடிக்கைகளுக்கு…

Read More

எமது கட்சி மு.கா விற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கின்றது -YLS ஹமீட்

– எஸ்.அஸ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கல்முனை மண்ணில் இன்ஷா அல்லாஹ் மக்கள் பங்களிப்புடன் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். இன்று எமது கட்சியின் அம்பாரை மாவட்ட வருகையானது மு.கா விற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கின்றது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் தேர்தல் வேட்பாளருமான வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கட்சியின் சார்பாக கல்முனையில் 7 ஆம் இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் சிரேஷ்ட…

Read More

எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் -ரணில்

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் தெஹிவளை சந்தியில் முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணிசிங்க, ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளா் ஊடகவியலாளா் உபுல் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது இங்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் தற்பொழுது ஜ.தே.கட்சி மட்டும் இம்முறை வாக்கு கேட்கவில்லை. ஜ.தே.முன்னணி என்ற அமைப்பில் பாட்டலி சம்பிக்க, எம்.டி.எஸ் குணவா்த்தன, அர்ஜூன ரணதுங்க ராஜித்த சேனாரத்தின முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், திகாம்பரம். மனோகனேசன் மற்றும் 167 சமுக அமைப்புக்கள்…

Read More

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்

கடவுச்சீட்டு வழங்கும் போது உயிரளவியல் தவல்களை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் தகைமை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கருத்திற் கொண்டும் நாட்டின் நம்பிக்கைத் தன்மையை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Read More