Headlines

இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்க சகோதிரி

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதிரி அமெரைிக்காவை சார்ந்தவர் கிருத்துவ மதத்தில் பிறந்தவர் அமெரிக்காவில் படிக்கும் அரபு நாட்டு மாணவிகளுடன் ஏர்பட்ட பழக்கத்தினால் இஸ்லாத்தை அறிய தொடங்கினார் இஸ்லாத்தை கற்று அறிந்த பிறகு இஸ்லாத்தின் பால் முழுமையாக ஈர்க்க பட்டார் தன்னை இஸ்லாத்திலும் இணைத்து கொண்டார் இஸ்லாத்தில் இணைவதர்கு முன்னால் நவநாகரிக ஆடைகளை அணிந்து பழகிய அந்த சகோதிரி இஸ்லாத்தை ஏற்ற பிறகு பர்தாவுக்குள் அடைக்கலமானார் அரை நிறுவாண ஆடைகளுக்கு விடை கொடுத்தார் இஸ்லாத்தை ஏற்று கொள்வதர்கு முன்பு…

Read More

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வீடியோவை பார்க்காதவர் நஷ்டவாளியே!

பலஸ்தீனில் முஸ்லிம்களுக்கும் யுத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது இன்று முஸ்லிம்களின் புனித இல்லமான பைத்துல் முகத்தஸில் தொழுகைக்கா சென்ற முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தியது தடுப்பு சுவராக நின்று முஸ்லிம்களை புனித தலத்தை நோக்கி முன்னேற விடாமல் தடுத்த இஸ்றேல் இராணுவத்தின் முன்பே தொழுகை விரிப்புகளை விரித்து வீதியிலேயே முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றினர் அந்த அர்புதமான காட்சியை தான் காட்சி விளக்குகிறது கீழ் கானும் வீடியோ    

Read More

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு றிஷாத் பதியுதீன் வாழ்த்து

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். இந்தப் பரீட்சை உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பரீட்சையென்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களின் குடும்பத்தார் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்களை படிப்பித்து இந்தப் பரீட்சைக்கு தயார்படுத்தி அனுப்பியுள்ளனர். அவர்களின் கனவுகளை நீங்கள் நனவாக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் குருவானார் றிஷாத் பதியுதீன் 

Read More

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். நாளைய தினம் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 3லட்சத்து 9ஆயிரத்து 69 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். 2லட்சத்து 36ஆயிரத்து 72 பேர் பாடசாலை ரீதியாகவும்,72ஆயிரத்து 997 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். நாடுபூராகவும்,2180 பரீட்சை மத்திய நிலையங்களும்,303 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை பரீட்சை கடமைகளில் 22ஆயிரம் பேர் ஈடுபடுவார்கள் என்று…

Read More

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இன்று அடிக்கல்!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் இன்று (03) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக கடவத்தை முதல் மீரிகம வரையில் 37 கிலோமீற்றர் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன்படி கடவத்தை, மீரிகம, பொதுஹேர குருணாகல் ஊடாக தம்புள்ளை வரையிலும் கடவத்தை மீரிகம பொத்துகேபுர ரம்புக்கன, கலகெதர ஊடாக கண்டி வரையிலும் இந்த அதிவேக பாதையில் பயணிக்கலாம்.

Read More

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : ருவன் விஜயவர்த்தன

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தலை முன்னிட்டு ,எதிர்க்கட்சியினரால் வழமையாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பரப்புரைகளை கேட்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று…

Read More

கல்முனை வடக்கு இளைஞர் அமையம் ACMC யை ஆதரிக்க தீர்மானம்

(அப்துல் சுகைர் லத்தீப்) கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பூரணமாக ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் அதன் வேட்பாடளர்களின் வெற்றி வாய்ப்புக்காகவும் வெளிப்படையாக களமிறங்கி செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கல்முனை வடக்கு இளைஞர் அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் தலைமையில் நடைபெற்ற விஷேட தேர்தல் கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் கிராம சேவகர் பிரிவு…

Read More

நாசகார சக்திகளுக்கு எதிராக நாம் துணிந்து பேசினோம்

பாரம்பரியமாக இருந்த எமது காணிகளை அபகரித்து கொண்டு அதனை மக்களுக்கு கொடுக்காமல் இருந்த போது அதனை பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தலைமைகள் இந்த மாவட்டத்திலும் இருந்ததை பார்க்கின்றேன் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலையில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலினை பாதுகாப்பு தரப்பு ஆக்கிரமித்து வைத்திருந்த போது அதனை கூட மீட்டுக் கொடுக்க முடியாத பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இந்த மாவட்டத்தில் இருந்ததாகவும் கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய…

Read More

தாஜுதீனின் சடலம் தோண்டி எடுப்பு!

-Al Mashoora- மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சி காலத்தில் (2012) திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ரக்பி விழையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம் மேலதிக விசாரணைக்காக (02.08.2015) தெகிவளை மைய்யவாடியில் தோண்டி எடுக்கப் பட்டது.

Read More

இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் – இஸ்மாயில்

எம்.சி.அன்சார் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் எமது முஸ்லிம் தலைமைகள் சமூக, பொருளாதார நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் குறைகளை நிவர்த்திப்பதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாம் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கியுள்ளோம். இத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எதிர்வருகின்ற தேர்தலிலே முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் தைரியமாக குரல்கொடுக்கும் அகில இலங்கை…

Read More

அணிவகுப்போம் அறப்போருக்கு!

A.S.M.இர்ஷாத் அணிவகுப்போம் அறப்போருக்கு… ஏற்றமிகு சமுதாயமா? ஏமாறும் சமூகமா? வெற்றிகரச் செயலா? வெற்றுப் பேச்சா? ஏற்றமிகு வன்னி மாவட்டத்தின் கண்ணியம் மிக்க முஸ்லிம் வாக்காளர்களே… உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக! உக்கிரமும், நெருக்கடிகளும் மிக்க இக்கட்டான சூழ்நிலையில் திக்குத் தெரியாது வாக்குச் சாவடி நோக்கி விரையும் உடன் பிறப்புக்களே ! கொஞ்சம் நில்லுங்கள்! பாதையைவிட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது. பட்டுப்போகும் மரத்திலிருந்து நிழலோ பழமோ கிடைக்காது. உரிமை காக்கும் துணிவை அரணாக கொண்டு முஸ்லிம் சமூதாயத்தில் மறுமலர்ச்சியை…

Read More

நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெறும் அரசியல் கலாச்சாரம் என்னிடம் இல்லை

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் தன்னிட மில்லையென அமைச்சரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, நான் என்றுமே மக்கள் பணியாளனாகவே இருந்து வருகின்றேன். அரசியலுக்காக மட்டும் மக்களிடம் வருவதில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின்…

Read More