Headlines

கிழக்கு மாகாண சபை அமர்வில் அமளி துமளி

– எம்.எஸ்.எம்.நூர்தீன்/ எப்.முபாரக் – கிழக்கு மாகாண சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளியினால் சபை அமர்வு அரை மணி நேரம்  ஒத்தி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் கூடியது. இதன்போது,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவசர பிரேரணை தொடர்பில் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன்போது,…

Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு பிரபல அமைச்சர்கள் கோரிக்கை

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து…

Read More

அரச நிறுவனங்களில் மின்சார முகாமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்!

தனியார் துறைகளை போன்று அரச நிறுவனங்களிலும் மின்சக்தி, எரிசக்தி முகாமைத்துவ பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய சக்தி ஆற்றலுக்கான விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்சக்தி, எரிசக்தி துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்களுக்கு அரச துறை மாத்திரமன்றி, தனியார் துறையினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன்,…

Read More

கடலில் மூழ்கி 18 வயது ஏறாவூர் இளைஞன் பலி

ஏறாவூர் – சவுக்கடி கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக  ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

துபாயில் பெரும் தீ விபத்து. இரு 5 மாடி கட்டிடங்கள் சாம்பல் (வீடியோ & படங்கள்)

துபாயின் தேரா பகுதியில் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்…

Read More

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தினால் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 6 மாதங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்ற பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்த நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் நாடாளுமன்ற விதியில் அமைக்கப்பட்டள்ள பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்திக் சென்றுள்ளார். தொலைக்காட்சி நாடகமொன்றின் படப்பிடிப்பு பூர்த்தியாகி நேற்று அதிகாலை நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை வழியாக குறித்த நடிகை வாகனத்தில் சென்றுள்ளார். அதிக வேகமாக சென்ற குறித்த நடிகை வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு சென்றுள்ளதுடன், சில பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கோன்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார். நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் ஜயந்திபுர பிரதான வாயில் பகுதி இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும். குறித்த நடிகை, மோட்டார் வாகனத்தை அதிக…

Read More

ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்

மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது. இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும்…

Read More

அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறையவில்லையா?

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு கூறியது. எனினும், இதுவரை வரவு செலவுத் திட்ட சலுகை நுகர்வோரைச் சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு…

Read More

வைத்தியசாலைக்கு தனியாகச் சென்ற ஜனாதிபதி

சிகிச்­சைக்­காக கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குண­வர்­த­னவை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பார்­வை­யிடச் சென்றபோது பிடிக்கப் பட்ட படமே இது. இதன்போது அவர் பாது­காப்பு பிரி­வி­னரை அழைத்துச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­னர். இந்த நான்கு பாரா­­­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான மலிக்­ ச­ம­ரவிக்கி­ர­ம­வுடன் இது­தொ­டர்­பாக இரண்டு சுற்று பேச்­சு­வார்த்தைகளை நடத்­தி­யுள்­ள­னர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் இந்த நான்கு பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது தீர்­மா­னம் குறித்து அமைச்சர் மலிக் சம­ர­விக்கி­ரம பிர­­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் அறி­வித்­துள்­ளார்.ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியின்…

Read More