Headlines

மின்னல் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

நாட்டில் இன்று ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் சகல பகுதிகளிலும் வாழ்கின்ற பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Read More

பாடசாலை மாணவர்களே புகைப் பரிசோதனை கட்டணத்தை செலுத்த வேண்டும்

புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும்போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Read More

அமீர்கானின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கூறியுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமீர்கான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்படி பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, நாட்டில் மதத்தின் பெயரால் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவுள்ளதாகவும், ஒரு இந்திய குடிமகனாக என்னால் அதனை மறுக்க முடியாது…

Read More

அப்பாவிகளை கொல்பவன் முஸ்லிமே அல்ல: அமிர் கான் கடும் கண்டனம்

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். களின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:- இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை…

Read More

இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இலங்கை விவ­கா­ரத்தில் அதீத அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­த­ர­ வ­தி­வி­டப்­ பி­ர­தி­நிதி சமந்தா பவர், இலங்­கையில் தற்­போ­து­வ­ரையில் நல்­லி­ணக்கம் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­­ப­ப்பட­வில்­லை­யெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடு­க­ளுக்­கான நிரந்­த­ர வதி­வி­டப்­பி­ர­திநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள நிலையில் அவ­ரது விஜ­யத்தின் இறுதி தின­மான நேற்று இலங்­கையின் எதிர்­கா­லத்தின் தூண்­க­ளாக காணப்­படும் இளைஞ சமு­தா­யத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். கொழும்பில் ஒரு­மணி நேர­மாக இடம்­பெற்ற…

Read More

வரவு – செலவுத் திட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் பொது மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனவா? இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளதா? என அறிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்து மாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தை வலியுறுத்தினார். கொழும்பு பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் சோஷலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர்…

Read More

ஐ.எஸ் எவ்வாறு உருவானது.. ? விளாடிமிர் புடின் விவரிக்கிறார் (வீடியோ)

‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்? ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும்…

Read More

எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோம் – றிஷாத் பதியுதீன்

– அஸ்ரப் ஏ சமத் – அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது சாத்தியப்படவில்லை. அப்படியிருந்தும் நாம் எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோமென அக்கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்ருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கிரைபைட் லங்கா பிறைவட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத் தனது கடமைப் பொறுப்புக்களை நேற்று கையேற்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்…

Read More

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், தடங்கள் இல்லை

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், கடற்படையினர் தலையிட்டமையினால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடங்களும் இல்லை என்று கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது, அதன் தலைவர் பீ.ஐ. அப்டின் தெரிவித்தார்.

Read More

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார். அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More

அமைச்சரின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் கைது

விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகாரையின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் பெயரை கூறி ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் 4 முதல் 5 இலட்சம் வரையிலான பணத்தை மோசடி செய்துள்ளார். இது போன்று பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More