அறிஞர் PJ யின் இலங்கை, வருகையை முன்னிட்டு…!
-A. அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey- சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில் காணப்பட்ட சமூக அக்கறைகளையும் தியாக உணர்வுகளையும் கண்ட பின் அவர்களில் உள்ள முரண்பட்ட நிலைகளை மாத்திரம் வைத்து அவர்களை அனுக என்னால் முடியவில்லை. நான் அதிகம் முரண்படும் உஸ்தாத் மௌதூதி,சிந்தனை சிகரம் அஸ்ஷைக் ரஷீத் ரிலா,முஹம்மத் அல் கஸ்ஸாலி,கலாநிதி முஸ்தபா மஹ்மூத் போன்றவர்களை இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு சேவையாற்றியவர்கள் என்றே கருதுகிறேன்….
