Headlines

அநுராதபுரம் கராத்தே வீரர் கொலை! 35 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

அநுராதபுரம் நகரில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 பேர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வசந்த சொய்சா என்ற என்ற களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்ததாக கூறப்படும் இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் உட்பட 35 பேருக்கு எதிராக காவற்துறையினர் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளனர். அநுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலங்சூரிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே காவற்துறையினர்…

Read More

கைதிகள் விடுதலையால் பாதுகாப்பிற்கு பிரச்சினையில்லை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

வாகன புகை பரிசோதனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

புகை பரிசோதனை பத்திரம் வழங்குவதற்காக அறவிடப்படும் தொகை அதிகரிக்கப்படவில்லை என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கபட்ட தொகை புகை பரிசோதனையின் போது அறவிடப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

Read More

சிங்களவர்களை பற்றி நல்லாட்சி அரசு எதனையும் பேசுவதில்லை: ஞானசார தேரர்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் பலருக்கு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாரிய தேவை இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பிரச்சினைகள் என்பது சிறுபான்மை இனத்தவருக்கு மாத்திரம் இருப்பதில்லை சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி நல்லாட்சி அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை. புத்தசாசனத்திற்கு அமைச்சர்கள் இல்லை. பொறுப்பான…

Read More

இஸ்லாத்தை அவமதிக்கும் செயற்பாடு: ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி

நாட­ளா­விய ரீதியில் பாட­சா­லை­களில் மூன்றாம் தவணைப் பரீட்சை நடை­பெற்று வரும் நிலையில் மன்னார் கல்வி வல­யத்­தினால் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற தரம் 2 மற்றும் 3 க்கான இஸ்லாம் பாட பரீட்­சைக்­கு­ரிய வினாத்­தாள்­களில் பார­தூ­ர­மான எழுத்துப் பிழைகள் இடம்­பெற்­றி­ருந்த­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி தெரி­வித்­துள்ளார். குறித்த வினாத்­தாளில் ‘நபி’க்கு ‘நரி’ என்றும் ‘தாய்’க்கு ‘நாய்’ என்றும் அச்சு பிழைகள் ஏற்­பட்­டிருந்­த­தா­கவும் இது இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள…

Read More

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில்

நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை  2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk(link is external)  (link is external) மற்றும்www.exams.gov.lk(link is external)  (link is external) ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்….

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று தீர்ப்பு!

தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்ப்பு இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது. தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 5ம் திகதி மாணவர்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தி செய்யப்பட்ட பரிந்துரைகள் தெடர்பில் இன்றைய தினம் தேசிய…

Read More

பாராளுமன்ற பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை

பாராளுமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இன்று பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

அமீர் கானை அறைபவர்களுக்கு பரிசு: சிவ சேனா!

நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கருத்து கூறியதால், டெல்லியில் வழக்கு, நாடு முழுவதும் கண்டனம் என்று பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவோம் என்று சர்ச்சைகளுக்கு பேர் போன இந்து அமைப்பான சிவ சேனா அறிவித்துள்ளது. ‘‘என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி…

Read More

ரயிலில் தற்கொலை செய்ததாக நம்பப்படும் 18 வயது மாணவன் குறித்து சந்தேகம்

– பா.சிகான் – அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதத்துடன்  மாணவன்  இன்று தற்கொலை செய்தமை குறித்து மக்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.   கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.   கோண்டாவில்  பகுதி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று (26) காலை  ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   எனினும் இம்மாணவன் தனியாக வந்தாரா அல்லது…

Read More

கோத்தபாய பாரிய நிதி மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அமைச்சர் றிஷாத்  – அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு கடிதம்

– முனவ்வர் காதர் – வடக்கில் மீள்குடியேறிவரும் மக்களை, யாணைகளின் அச்சத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வனஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி பிரதேசங்களில் பல பகுதிகள் யாணைகளின் அச்சுறுத்தலுக்கு மக்கள் உள்ளாக வேண்டிய சூழல்…

Read More