இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரிப்பதற்கு அதிகாரிகள் இல்லை!
இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பில் கடந்த ஆட்சியில் 6,000 முறைப்பாடுகளும், தற்போதைய ஆட்சியில் 4,000 முறைப்பாடுகளும் என மொத்தமாக 10, 000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த, இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனாலேயே விசாரணைகள் தாமதமடைவதாகவும் தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாட்சிகளைத் தம்மிடம் வழங்குமாறும், சாட்சி வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பை வழங்க தாம்…
