Headlines

புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு தீர்மானம்

ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்­மையை கண்­ட­றியும் பொறி­முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொள்­வ­தற்­கான புத்­தி­ஜீ­விகள் குழுக்­களை அமைப்­ப­தற்கு சர்­வ­கட்சி தலை­வர்கள் கூட்டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டினார். நாட்டின் கௌரவம் பாது­காக்­கப்­படும் வகையில் ஐ.நா. பரிந்­து­ரைகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள்…

Read More

புலம்பெயர்ந்தோரின் ஒத்துழைப்பு தேவை

இன­வாதம், மத­வாதம் உள்­ளிட்ட நாட்டில் காணப்­பட்ட பல தரப்­பட்ட பிரச்­சி­னை­களின் கார­ண­மாக நாட்டை விட்டு புலம்­பெ­யர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். மேலும், புலம்­பெ­யர்ந்­த­வர்கள் அனை­வரும் இலங்­கையின் புதிய மாற்றம் நோக்­கிய பய­ணித்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார். ஜன­வரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டுவரும் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­று­வது உள்­ளிட்ட அனைத்து நல்­லாட்சி வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் ஐக்­கிய நாடு­களின்…

Read More

கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை!

நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இமேஷா வசந்த என்பருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். மேலும், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வசதிபடைத்தவர்களுக்கு வரி அதிகரிப்பு! பொருட்கள் மீதான வரிகுறைப்பு

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றி மோசடி செய்வதன் ஊடாக பெரும் வரி இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் ஊடாக அவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதே…

Read More

மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளைய தினம் (19) பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது. ஐ.டி.என் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார். இதேவேளை ஐ.டி.என் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறுகின்றன….

Read More

வால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி

நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி இருப்பதாக வேற்று கிரகவாசிகளை நம்புவோர் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்தின் பிரமிடுகள் வேற்று கிரகவாசிகளின் கண்காணிப்பில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என பலரும் நம்பி வருகின்றனர். ஆகவே, வால் நட்சத்திரத்தில் உள்ள இந்த மாபெரும் கல்சவப்பெட்டி வேற்று கிரகவாசிகளுக்கானதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது…

Read More

தீர்வில்லா நிலையில் வீதிக்கு இறங்கும் பட்டதாரிகள்

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருமாறும், மாகாணங்களில் காணப்படுகின்ற 15000திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திய கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நாளை (18) நடைபெறவுள்ளதாக ஒன்றிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடந்த 7 மாத காலமாக தாம் பொறுப்பு கூற வேண்டிய அனைத்து தரப்பினருடனும் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கான தீர்வு…

Read More

வெக்கம் கேட்ட உலக நாடுகள்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர்   கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்  கொல்லப்பட்டவர்களில்  8 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் ஊடகங்களின் மூலம் எம்மால் அறியக் கிடைத்தது. இத்தாக்குதலுக்கான முழுப் பொருப்பையும்  சர்வதேச தீவிரவாத இயக்கமான  ஐ.எஸ். ஐ.எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது உண்மையில் இத்தாக்குதலானது ஜனநாயக நாடான பிரான்ஸின் அமைதி நிலையை சீர்  குழப்பவே மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக அறிய முடிகின்றது. உலகத்தையே உல்லங்கையில்…

Read More

இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக புனையப்பட்ட பொய் அம்பலமானது

பிரான்ஸில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்திற்கும், இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும். ஆயினும் அந்த வன்முறை வெறியாட்டத்தை இஸ்லாத்தோடு முடியவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் இஸ்லாமிய விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஒரு குற்றவாளி குர்ஆனை கையில் சுமந்து கொண்டு நிற்பது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு புகைபடம், அந்த புகைப்படம் இஸ்லாமிய விரோதிகளால் சமூக வலைதளங்களில் வெளியிடபட்ட சில நிமிடங்களிலேயே அந்த படம்…

Read More

நரபலி கொடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23).  தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான  உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார்.  2013 ஆம் ஆண்டின் குறைபாடு உள்ளவர்களுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை பெற்று உள்ளார். இவரது நண்பர் தாண்டுவாக்கே துமா (வயது 21).  அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதி ஆகியோர் சேர்ந்து…

Read More

ஆஸ்திரேலியாவில் முதல் முஸ்லிம் அரசியல் கட்சி உதயம்

– அலுவலக நிருபர் – ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்று உதயமாகியுள்ளது. இந்த கட்சியின் அன்குரார்பன நிகழ்வு அண்மையில் சிட்னி நகரில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் ஸ்தாபகர் திரு.முஹம்மத்  “எமது கட்சி ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரலாகவும் ஒலிக்கும், எதிர்வரும் செனட்   தேர்தலில் களமிறங்க விரும்புகிறது” – எனவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் அதிக கட்சிகள் முஸ்லிம் விரோத போக்கை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Read More