புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு தீர்மானம்
ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கான புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானம் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். நாட்டின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
