Headlines

இலங்கைக்கு எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை. அனைத்து நாடுகளும் நட்பு நாடுகளாகவே இருக்கின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் தொடக்கிவைக்கப்பட்டபோது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

Read More

15ஆயிரம் தொடர்மாடி வீடுகள் நிர்மானிக்கப்படும் -சம்பிக்க

– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பினை அழகுபடுத்துதல் என்ற போர்வையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட சில திட்டங்கள் முற்று முழுதாக பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்காக பாரிய நிதி வீனடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பாரிய நிதிகள் மோசடியாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நகர அபிவிருத்தி சகல கட்டுமான திட்டங்களும் முறையான பொறியியல் திட்டமிடாமலும் தனிப்பட்டவர்களுக்கு கட்டுமான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறமாட்டாது….

Read More

ஹிலாரி கிளிண்டன் கை ஓங்குகிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, தொடர்ந்து 2 முறை பதவி வகித்து விட்டதால், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க அமெரிக்காவின் 67-வது வெளியுறவு மந்திரி பதவி வகித்த 67 வயது ஹிலாரி கிளிண்டன் தீவிர முனைப்பில் உள்ளார். அவருக்கு பெரும் போட்டியை…

Read More

சீனாவில் மின்­மினி பூங்­கா

மின்­மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறை­வே­றி­யுள்­ளது. மத்­திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்­மினிப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு இரவு நேரங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மின்­மினி பூச்­சி­களின் ஒளியைக் கண்டு ரசிக்­கலாம். இந்தப் பூங்கா 5 பகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பறக்கும் பகுதி, கவ­னிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்­பெ­ருக்கப் பகுதி, அறி­வியல் விளக்கப் பகுதி என்று பிரிக்­கப்­பட்டு, பார்­வை­யா­ளர்­களைக் கவர்ந்­தி­ழுக்­கி­றது. இங்கே பார்­வை­யா­ளர்கள் தவிர, ஆராய்ச்­சி­யா­ளர்­களும் பெரு­ம­ளவில் வரு­கி­றார்கள். இங்­கி­ருந்து மின்­மி­னி­களை விலைக்கு வாங்­கிக்­கொண்டும்…

Read More

அளுகோசு பதவி : 13 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை

மரணத் தண்டனை கைதிகளை தூக்கில் போடும் தொழிலான அளுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை 24 விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பெற்றுளதாகவும் இம் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் நேர்முகத் தெரிவின் போது தகுதியான  இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத் தொழிலுக்கு ஆகக் குறைந்த கல்வித் தகைமை 8 ஆம் தரம்வரை கல்வி கற்று இருக்க…

Read More

சீரற்ற காலநிலை : வாகன சாரதிகள் அவதானம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்  பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். வாகனத்தில்  முன் விளக்கு ஒளிரவிட்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய  களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மதவாச்சியில் பஸ் விபத்து : 5 பேர் படுகாயம்

மதவாச்சி – நாவற்குளம் பிரதேசத்தில் இரண்டு பஸ் வண்டிகள் இன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மற்றும் விமானப் படையினரின் பஸ் வண்டி என்பன வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் இடம்கொடுக்கும் போது, மழை காலநிலை காரணமாக, குறித்த வீதி வழுக்கியதில் இந்த இரண்டு பஸ்களும் வீதியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது…

Read More

உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஜப்பான் ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

Read More

CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் காணி பறிபோகிறது

டி.ஏ. ராஜபக்ஸ அமைப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேறும் எந்தவொரு பணிக்காகவும் குறித்த காணி பயன்படுத்தப்பட மாட்டாது என நிபந்தனையை மீறி ராஜபக்ச அமைப்பு, சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவைக்கு காணிகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் குறித்த காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த சட்டவிரோத…

Read More

இஸட் வெட்டுப் புள்ளிகள் வெளியானது

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகள்http://www.ugc.ac.lk/ (link is external) என்ற இணைத்தளத்தில் பார்வையிடலாம் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில்  மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து…

Read More

12 ஆம் திகதி புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார். இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றதுடன் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More