Headlines

சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடைப் பெண்­களின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தக பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குற்றச் செய­லொன்­றுடன் தொடர்­பு­பட்­டது அல்ல என பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது. சீருடை மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­ன மாண­வியின் பாட்­டி­யினால் மாண­வியின் வீட்டில் ஒப்­ப­டைக்­கு­மாறு கொடுத்து அனுப்­ பப்பட்­டது என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன தைத் தொடர்ந்து கைதான 23 வய­து­டைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப்…

Read More

சிரியாவில் அமெரிக்க நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது – ஒபாமா

சிரியா உள்நாட்டு யுத்தத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சி படைகள் கடந்த 4 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போது, ஐ.எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருவதால் உள்நாட்டு யுத்தம் வலுவடைந்துள்ளது. இந்த யுத்தத்தை தடுப்பதற்காகவும், ஐ.எஸ் வாதிகளை முறியடிப்பதற்காகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், நேற்று அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு…

Read More

அப்பட்டமான மனித உரிமை மீறல்

உத்தர பிரதேசம் மாநிலம் தாத்ரியில் பசு இறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சியை கொன்று சாப்பிட்டதாக வதந்தியால் முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் நீதிபதி ஜோசப் “தாத்ரி படுகொலை அப்பட்டமான மனித உரிமை மீறல். ஏற்கனவே இந்த பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம்…

Read More

தொடரும் இஸ்ரேலின் அக்கிரமம்…

கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்ற குற்றச்சாட்டில் மற்றுமொரு பலஸ்தீன இளைஞன் கிழக்கு ஜரூசலத்தில் வைத்து இஸ்ரேலிய எல்லை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார். புனித அல் அக்ஸா பள்ளிவாசல் லயன் கேட்டை ஒட்டியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாயில் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய செய்தித் தளமான டைம்ஸ் ஒப் இஸ்ரேல் சம்பவம் குறித்து விபரிக்கும்போது, எல்லை பொலிஸார் பலஸ்தீன இளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவரது காற்சட்டை பையில் இருந்து…

Read More

மஹிந்தவிற்கு வழங்கபட்ட பட்டங்கள் பறிக்கப்படுமா..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை பீடத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டங்களை வழங்கியிருந்தது. 2009ம் ஆண்டு மே…

Read More

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பாம்பு

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இருந்து விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நூலகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொது மின்தூக்கிக்கும் இடையிலுள்ள பூஞ்சாடி ஒன்றுக்குள் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடிப்படையினர் வழமையாக மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையின் போது இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்துக்குள் பாம்புகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு தடவையில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.

Read More

வர்த்­தகர் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27ம் திகதி

பம்­ப­லப்­பிட்டி கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முஹமட் சியாமை படுகொலை செய்தல், கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது…

Read More

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தீவிரம்

இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர். வலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து , சிவசேனைக்…

Read More

புதிய ஆய்வில் இறங்கியுள்ள இளம் விஞ்ஞானி அஹ்மத்

கடிகாரத்தை சுயமாக தயாரித்து பள்ளிக்கு எடுத்து வந்த முஸ்லிம் சிறுவனை, வெடி குண்டை கொண்டு வந்திருப்பதாக கருதி அந்த சிறுவனின் கையில் விலங்கு மாட்டியது ஒரு அமெரிக்க கல்விகூடம். பிறகு அந்த தவறு சரி செய்ய பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே அந்த சிறுவனை அழைத்து உபசரித்து உற்சாகபடுத்தினார். அந்த சிறுவன் அஹ்மது, தற்போது அவனது குடும்பத்தோடு சவூதி மன்னர் சல்மானின் விருந்தாளியாக மக்காவிற்கு உம்ரா  செய்ய வந்துள்ளான். சிறுவன் அஹ்மது சவூதி அரேபியாவில் ரியாத் நாளேடுக்கு…

Read More

முஸ்லிம் என்றால்..!

முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான், நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான், அவனுக்கு இறைவன் தடுத்தவற்றை ஒருபோதும் எடுக்க மாட்டான், அவன் கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான், அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான். சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர், அகதிகளாக செல்பவன் குபேரனாக இருக்க வாய்பில்லை, சிரிய அகதிகளில் பலர் அன்றாட உணவு தேவைகளுக்கே சிறமபடுகின்றனர்.    இந்த சிறமம் நிறைந்த சூழலிலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாத, தனக்கு தேவைகள் இருந்தாலும்…

Read More

அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு நாளை

வெற்றிடமாக காணப்பட்ட சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை(13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட வாக்குமூலம் பெற்றுகொண்டதன் பின்னர் அவர்…

Read More