Headlines

சேயா செதெவ்மி கொலை – 10 பேரிடம் வாக்குமூலம்

சேயா சதெவ்மி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்ட கொட்டதெனியாவை பகுதியைச் சேர்ந்த சிலர் இன்று திவுலுபிட்டிய காவற்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட 17 வயதான மாணவர் மற்றும் குடும்பஸ்த்தர் ஆகிய இரண்டு பேரும், காவற்துறையினருக்கு எதிராக முறைபாட்டை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 10 பேர் வரையில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை…

Read More

கொரியாவில் மீன்பிடித் தொழில் புரிய விருப்பமா?

15வது கொரிய மொழி பரீட்சையின் மீன்பிடி பிரிவில் வேலை வாய்ப்பு தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 21ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்காலை, காலி, மாத்தறை, சீதுவ மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள பயிற்சி மத்திய நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை 18 வயது முதல் 39 வயது வரையானவர்கள் மற்றும் மீன்பிடித்துறையில்…

Read More

கடந்த காலத்தில் உலகின் புற்றுநோயாளி என சர்வதேசம் இலங்கையை அடையாளப்படுத்தியது – சஜித்

அரசாங்கம் எந்த காரணத்தை அடிப்படையாக கொண்டும் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை காட்டிக்கொடுக்காது என்பதுடன் கலப்பு நீதிமன்றம் ஒன்று நாட்டிற்குள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம உடுவில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கினர். அந்த மக்கள் ஆணையின் மூலம் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு எதிராக செயற்பட்ட…

Read More

சுத்தமான குடிநீரை கோரி ஆர்ப்பாட்டம், பொலிஸார் தடியடி பிரயோகம்

திஸ்ஸ – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் பல்லேமல சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். பந்தகிரிய பிரதேசவாசிகளே ஆர்ப்பாட்ட த்தை மேற்கொண்டுள்ளனர். சுத்தமான குடிநீரை கோரி இவர்கள் ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுத்துள்ளனர்.

Read More

பத்தரமுல்லையில் சடலம் மீட்பு

பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல இன்று பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருமையிலுள்ள வெற்று வளவு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான எச்.எம். இர்சாத் என்ற 32 வயது குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

புதிய போக்குவரத்து ஒழுங்கு : கடும் வாகன நெரிசல்

கொழும்பின் சில வீதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு முறைகள் காரணமாக பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய பத்தரமுல்லை, பாராளுமன்ற சுற்றுவட்டம், வெலிக்கடை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஏறாவூர் பிரதேசத்தில் 1 கோடி ரூபா பெறுமதியான மீன்கள் சிக்கின!

ஏறாவூர் பிரதேச சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரைவலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது  கரைவலைகளிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்தமை…

Read More

வெளிநாட்டு வங்கி கணக்குகளை கூறி தங்களை அவமதிக்க முயற்சி!- நாமல்

வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக கூறி தன்னையும் தனது குடும்பத்தையும் அவமதிப்பதற்கு முயற்சியொன்றியை குறிப்பிட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் மகனால் டுபாயில் வங்கி கண்க்கில் வைப்பு செய்யப்பட்ட 650 அமெரிக்க டொலர் கணக்கினை தடை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் செயற்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமையவே டுபாய் நீதிமன்றம் இந் நடவடிக்கையை மேற்கொள்கின்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கிடையில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக…

Read More

பிரதமராகும் கனவில் விமல் வீரவன்ச குழப்பங்களை விளைவிக்கின்றார்: அஜித் பெரேரா

பிரதமராகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குழப்பங்களை விளைவித்து வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச எல்லாக் காலங்களிலும் யாருடைய தோளிலேனும் ஏறியே அரசியல் செய்து வருகின்றார். பிரதமராகும் கனவு அவருக்கும் இருக்கும். அதற்கு தேவையான முயற்சிகளில் ஒன்றாகவே தற்போது நாடாளுமன்றில் குழப்பங்களை விளைவித்து வருவதனை கருத வேண்டும். ஜே.வி.பியில் இருந்த காலத்தில் ஜே.வி.பி லேபளில் பிரபல்யம் அடைந்து பின்னர் கட்சியை காலல் உதைத்து…

Read More

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் 1929 தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை மாத்­திரம் 1929 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு முறை­யி­டு­மாறு சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த சில நாட்­க­ளாக குறித்த 1929 தெலை­பேசி இலக்­கத்தின் ஊடாக அநா­வ­சி­ய­மற்ற முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெறு­வ­தாக அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை குறித்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு 1290 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவற்றில் 1202 முறை ப்­பா­டுகள் தேவை­யற்­றவை என்றும் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. அவற்றில் சிறு­வர்­களை பாட­சா­லைக்கு சேர்ப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள், சர்­வ­தேச பாட­சா­லை­களின் கட்­டணப்…

Read More

டெங்கு காய்ச்சல்; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

டெங்கு நுளம்புகள் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சல் குறித்து பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மென சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது. சுகா­தார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரி­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது. மழைக்கு பிந்­திய காலம் என்­பதால், டெங்கு நோய் தற்­போது வேக­மாக பரவ ஆரம்­பித்­துள்­ள­மை­யினால் பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். குறிப்­பாக மேல் மாகா­ணத்தின் கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இந்த நோய்…

Read More