Headlines

அப்பட்டமான மனித உரிமை மீறல்




உத்தர பிரதேசம் மாநிலம் தாத்ரியில் பசு இறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சியை கொன்று சாப்பிட்டதாக வதந்தியால் முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் நீதிபதி ஜோசப் “தாத்ரி படுகொலை அப்பட்டமான மனித உரிமை மீறல். ஏற்கனவே இந்த பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் விசாரித்து வருவதால், தேசிய மனித உரிமை ஆணையத்தால் விசாரிக்க முடியாது. இருப்பினும் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுவோம்.
மேலும் மாட்டிறைச்சிக்கு தடை என்பது மிகவும் சிக்கலான பிரச்சனை. ஆனால் மக்கள் அவர்கள் விரும்பியதை சாப்பிடும் உரிமையை பாதுகாப்போம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *