மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுப்பது குறித்து, அஸ்வர் விடுத்துள்ள அறிக்கை
பலஸ்தீன மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்கு எமது பாராளுமன்றத்தில் அவசர கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்று கொண்டுவர வேண்டும். அத்துடன் அனைத்து பள்ளிவாசல்களிலும் துஆப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 60 வருடங்களுக்கும் மேலாக மேற்குலக வல்லரசுகளின் ஆதரவுடன் பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் காட்டு தர்பார் தற்போது…
