Headlines

குறைவடையும் ‘கீச் கீச்’ சத்தங்கள்

நகரமயமாக்கத்தின்  விளைவு இந்த சிறிய பறவைகளின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டது. ஓட்டுவீடுகள் மறைந்து சிமெண்டு கட்டிடங்கள் அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக்குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தங்கள் குறைந்து வந்த நிலையில், செல்போன் டவர்களின் வருகை இந்த பறவைகளின் வாழ்வியல் இயக்கத்தையே அடியோடு புரட்டி போட்டு விட்டது. செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதீர்வீச்சுகள் சிட்டுக்குருவிகளின் உடல் இயக்கத்தையே சிதைத்து விடுகின்றன. என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தை பெற்று கொள்ள முடியாது என்ற சூழல் மனித இனத்துக்கு ஏற்பட்டால் எத்தகையை…

Read More

பர்கர், பீட்சா உணவுகளால் மூன்றே நாட்களில் சர்க்கரை நோய் வரலாம்!

நம் உணவுப் பழக்கத்திலும் ஒன்றிவிட்ட பர்கர், பீட்சாக்களில் மாவில் கலக்கும் அதீத சர்க்கரை அதனுடன் குடிக்கும் குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரை என இவற்றை தொடர்ந்து உட்கொண்டாலே மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வரும் ஆபத்து உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலிடெல்பியா நகரில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அமெரிக்க உணவுப் பழக்கங்களை மூன்றே நாட்களில் தொடர்ந்து கடைபிடித்தாலே நீரிழிவு நோய் வரும் என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காக சிறப்பான உடல்நலம் கொண்ட 6…

Read More

எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிர் இழப்பு ஏற்படலாம்?

வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம் என்ற எண்ணத்துடனேயே வாழைப்பழத்தை பலர் உண்ணத் தயங்குகின்றனர். சிலர் ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது வாழைப்பழம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் ஆணித்தனமாக நம்புகின்றனர். ஒரு நாளைக்கு நமது உடளுக்கு சுமார் 4800 மில்லி கிராம் பொட்டாசியம் தேவைப்படும். ஆனால், ஒரு வாழைப்பழத்தில் சுமார் 400 மில்லி கிராம்களே உள்ளது. அதிலும், நமது…

Read More

புலமைப் பரிசில் வினாத்தாளில் சிக்கலான கேள்வியால் சர்ச்சை

நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த சிக்கலான கேள்வி ஒன்றினால் மாணவர்களும், ஆசிரியர்களும் அசெளகரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை எந்த மாகாணத்துக்கு உரியது என்று இந்தமுறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் வினா ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.அளவையியல் திணைக்களத்தின் படி, சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கு உரியது. ஆனால் வரைபடத்துக்கு அமைய இது மத்திய மாகாணத்துக்கு உரியதாகக் காணப்படுகிறது.  எனவே இது சிக்கலுக்குரிய ஒரு வினா என்று…

Read More

முசலி பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை

– எஸ்.எச்.எம்.வாஜித் – மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி இன்னும் ஓரு சில மாதங்கள் அல்லது வருடத்தில் அணைத்து வசதிகளுடன் கூடிய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருவதாக நேற்று மாலை இடம்பெற்ற  வன்னி  விடியல் சமூகவலை தள கலந்துறையாடல் குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இப்படியான சமூக நல திட்டங்களை மக்கள் மத்தியில்…

Read More

ரணில்- மோடி சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Read More

ஆஸி.பிரதமர் அபாட் அவுட் : புதிய பிரதமராக டர்ன்புல்

அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைமை போட்டியில் தோல்வியடைந்த டோனி அப்போட் பிரதமர் பதவியை இழந்த தோடு அந்நாட்டுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இழுபறி நீடித்த லிபரல் கட்சியின் தலைமைக்காக நேற்று நடத்தப்பட்ட அவசர வாக்கெடுப்பில்அப்போட் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினரான மல்கம் டர்ன்புல்லிடம் தோல்வியடைந்தார். ஏற்கனவே மோசமான கருத்துக் கணிப்பை பெற்றிருந்த அப்போட் கட்சி உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பில் 44 வாக்குகளையே வெல்ல முடிந்தது. டர்ன்புல் 54 வாக்குகளை வென்று…

Read More

மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் : அனு­ர­கு­மார

இறுதி யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பாகும். குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடு­மை­யா­ன­தாக அமையும் என செய்­திகள் வெளி­வந்­துள்ள நிலையில் இலங்­கையின்…

Read More

25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

நக­ரங்கள், கிரா­மங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கும் பொறுப்­பி­னை தன்­னிடம் முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பணித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ வீட்டுப் பிரச்­சி­னை­களை கண்­டறிய ஒவ்­வொரு பிர­தேச மாவட்ட மட்­டத்தில் நட­மாடும் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் நாளொன்­றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இல்­லாது பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றன. இந்­தப் ­பா­ரிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான மிகப்­பெரும் பொறுப்பை…

Read More

அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு

அடுத்த ஐந்து வரு­ட ­கா­லத்தில் மிகவும் துன்­ப­க­ர­மான தோட்­ட­ப்புற லயம் வாழ்க்­கைக்கு முடி­வு கட்­டி­விட்டு அனைத்து வச­தி­க­ளு­டனும் கூடிய மலை­ய­கத்தில் புதிய கிரா­ம­ங்களை உரு­வாக்­க­வுள்ளோம் என மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பி. திகாம்­பரம் தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது மலை­ய­கத்­திற்கு எந்­த­வொரு அபி­வி­ருத்­தியையும் கொண்­டு­வ­ராத அரா­ஜகப் போக்­கி­லான அர­சி­யலை நாம் மீண்டும் தொட­ரப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ராக நேற்று கட­மை­களை பொறுப்­பேற்­றதன்…

Read More

சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசா­ர­ணைகளை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இலங்கை குறித்த சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்கை அர­சாங்கம் சரி­யான முறையில் கையாளும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். தவ­றி­யேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் தொடர்ந்தும் மஹிந்­தவின் ஆக்­கி­ர­மிப்பில் நாடு இருந்­தி­ருந்தால் எமது இரா­ணுவ வீரர்கள் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றில் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More