Headlines

மியன்மார் வௌ்ளப்பெருக்கில் ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு!

மியன்மாரில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பம் முதல் பெய்து வரும் கடும் மழை மற்றும் வௌ்ள அனர்த்தத்தினால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அலுவலக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ் வௌ்ளப் பெருக்கினால் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 1.2 மில்லியன் ஏக்கர்கள் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. ஆயினும் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் கல்விக்காக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரவட்டி டெல்ரா பிரதேச மக்களுக்கு (Irrawaddy Delta region) இன்னமும் அவதானத்துடன் இருக்கும்…

Read More

ஞானசாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : நீதவான் உத்தரவு

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதியன்று வெலிப்பன பொலிஸ் பகுதியில் பொலி;ஸ் அனுமதியின்றி கோயில் ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டிய போது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மத்துகம நீதிவானின் உத்தரவின் பேரில் ஞானசார தேரர்…

Read More

பொலிஸ் நிலையத்துக்குள் ஞானசார அட்டகாசம்

தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வேட்பாளர் விளம்பரத்துடன் பயணித்த ஞானசாரவின் பொது ஜன பெரமுன வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை பொலிசார் கழற்ற முயன்றபோது சாரதி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக கேள்வியுற்று அங்கு வந்த ஞானசார, பொலிஸ் நிலையத்துக்குள் அடாவடித்தனம் செய்து கூச்சலிட்டுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தாம் முயல்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரமாதலால் ஏதாவது…

Read More

உணர்ச்சிகரமாக பேசி வாக்குகளை சேகரிக்க முயல்கின்றனர் – அமைச்சர் றிஷாத்

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து சகல சமூகங்களின் தேவைகளை பெற்றக்கொடுக்கும் பணியினை முன்னெடுத்துவந்துள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீன் இதனை தொடர்ந்து முன்னெடுக்க முல்லைத்தீவிலிருந்தும் ஆளும் கட்சிக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுத்தர வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். நேற்று இரவு முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில்…

Read More

மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது

மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்ததது,அவர்கள் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்யவில்லை.இவ்வாறானதொரு நிலையில் வன்னி மாவட்டத்தில் எமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அதிகரித்து இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது என வன்னி மாவட்ட ஜ.தே.மு .முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பேசாலையில் தெரிவித்தார். மன்னார் பேசாலை மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து…

Read More

மருதமுனையில் மயில் ஆட்டம்: ஆணிவேரோடு சரிந்தது மரம்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் மருதமுனை நகரம் நேற்றிரவு (9) இடம்பெற்ற அ.இ.ம.கா வின் பிரச்சாரக் கூட்டத்தினை அடுத்து வேரோடு துடைத்தெறியப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக 1994 காலத்திற்கு முன்பு திகழ்ந்த மருதமுனை நகரம் பின்னர் முகா வின் கோட்டையாக நேற்று முன்தினம் வரை அனைவராலும் நோக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் அ.இ.ம.காவின் பொதுத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு மருதனையில் இடம்பெற்றது. இதன் மூலம் மருதனை நகரம் அ.இ.ம.கா வின்…

Read More

பல சந்தர்ப்பங்களில் நாம் அபிவிருத்தி செய்ய முற்பட்ட போதெல்லாம் மு.கா வினர் எம்மை ஓரம் கட்டினர்

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தால் இம்மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலத் தேவையாகப் பார்க்கப்படுகின்ற கரையோர மாவட்டம் நிச்சயம் பெற்றுத் தரப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கரையோர மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்பே நானும் எனது கட்சியினரும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வோம் இல்லையேல் நாம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொள்வோம் என வன்னி மாவட்ட வேட்பாளரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்….

Read More

500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!

ஹரியானா மாநிலத்தின் ‘ஹிசார்’ கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்துள்ளனர். உயர்ஜாதி ஹிந்துக்களின் கொடுமை காரணமாக ‘பகானா’ என்ற கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளனர். இஸ்லாத்தில் இணையும் தேதியை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ள ‘பகானா சன்கர்ஷ் சமிதி’ என்ற தலித் அமைப்பு, இஸ்லாத்தில் இணையும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே நடத்தப் போவதாகவும்…

Read More

அல்-அக்ஸா பள்ளி வாசலின் இமாம் வபாத்!

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுஊன் . பலஸ்தீன அல் அக்ஸா பள்ளிவாசலின் இமாம் வபாத் ஆகி விட்டார்கள். அவர்களுக்காக துவா செய்யுங்கள். அவர் இந்த உலக வாழ்கையை விட்டு போகும்போது கூட அவரின் முகத்தை பாருங்கள் எவ்வளவு பிரகாசமாக உள்ளது, மறுமையிலும் அல்லாஹ் பிராகசத்தை கொடுத்து சொர்க்கம் அடைய செய்ய நாம் துவா செய்வோம்.

Read More

இரும்பு திரையும் கடந்து சீனாவில் வளர்ந்து வரும் இஸ்லாம்!!

– சையது அலி பைஜி – உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனாவாகும் சீனாவின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் இஸ்லாத்தை முறையாக அறிந்து கொள்ளகுடியவர்கள் இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொள்வதாலும் சிந்திக்ககுடியவர்களின் புகலிடமாக இஸ்லாம் இருப்பதாலும் பொது உடமை தத்துவத்தின் புதைகுழியாக இஸ்லாம் இருப்பதாலும் இஸ்லாம் தொடர்ப்பான செய்திகள் சீனர்களை அதிகம் சென்று அடையாத விதத்தில் இஸ்லாமிய தகவல்களுக்கும் சீனர்களுக்கும் இடையே ஒரு இரும்பு திரையையே சீன…

Read More

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களும் ஏழைமனிதரும்!

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம்.எங்குமே பேரமைதி. இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம்…

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 1199 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து ஆயிரத்து 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச வளங்களை முறையற்ற விதத்தில் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை குறித்து 155 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதிக படியாக 254 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More