பிஞ்சுக்குழந்தையின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய தந்தையைப் பிடிக்க உதவிய சமூக வலைதளம்
பலரது நேரத்தை வீணாக்கி, அவர்களை அடிமைப்படுத்துவதாய் சொல்லப்படும் அதே சமூக வலைதளங்கள்தான் இன்று பல மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. கடந்த வாரம், சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஆவேசத்தின் உச்சகட்டத்துக்கே சென்று அந்த வீடியோவை தங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து அதில் உள்ள கொடூரனை யார் என்று அடையாளம் தெரிந்தால் சொல்லும்படி தங்கள் நண்பர்களிடன் உதவி கேட்டு, அவனை…
