Headlines

குருநாகல் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முஸ்லிம்கள் வபாத்.




இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் குருநாகலில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அனுராதபுரம், அசாரிகம பிரதேசத்தை  சேர்ந்த வாஹித் மவ்லவி, ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஜீப் ஒன்றுடன் மோதிய  போதே மேற்படி அசம்பாவிதம் இடம் பெற்றது எனவும், உயிரிழந்தவர்களில் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் மற்றவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் மேலும் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *