இலங்கைக்கு மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த…
