Headlines

ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது நோக்கம்: மைத்திரி

2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது அரசின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹலால் வரியின்றி வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க முடியாது என கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இருந்து வந்த கருத்து இந்த நாட்டை மிகப்பெரும் தேசிய அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் எனவே ஹலால் வரி வருமானத்தை நீக்கி திறைசேரியை பலப்படுத்துவதை தமது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதி…

Read More

ஐ.தே.கவுக்கு ஆதரவு அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் ஆதரவு வழங்கவுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐக்கிய தேசிய கட்சி பரந்த கூட்டணியாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும். எனினும் யானை சின்னத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாதென பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தல் சின்னமாக யானையை பயன்படுத்துமாறு கட்சிக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அனைத்திடமும் கோரிக்கை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தபாய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு யோசனைகள் கிடைத்தன. எனினும், நான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளேன். ஆனால், எதிர்வரும் காலங்களில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு என்னை நான் அர்ப்பணிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

“கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்” நுால் வெளியீடு

– அஷ்ரப் . ஏ. சமத் – பி.அமல்ராஜின் “கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்”  தமிழ் தந்தியியல் வெளியான நீள் தொடாின் தொகுப்பு) நுால் வெளியீடு 12.07.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். காப்பியக்கோ டாக்டா் ஜின்னா சரிப்தீன் (துனைத் தலைவா்) கொழும்பு தமிழ்ச்சங்கம் அவா்கள் தலைமையில் நடைபெறும்.  வெளியீட்டுரை  கவிஞா் அஷ்ரப் ஷிகாப்தீன், புத்தக வெளியீடு முதல் பிரதி திரு. திருமதி பிரான்சீஸ்,  நுால் விமா்சனம்,  மு.தயாபரன்,  வரவேற்புரை கவிஞா்…

Read More

ஜொன்ஸ்டன், மகிந்தானந்த , ரோகித்த, பிரசன்ன போன்றோர் வேட்பு மனு தாக்கல்

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா்களான ஜொன்ஸ்டன், மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த மற்றும் வசந்த விஜயவா்த்தன மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரனதுங்க ஆகியோா்களுக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் நிதிமோசடிகள் ஈடுபட்டாா்கள் எனவும் இவா்களுக்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருந்தும் நேற்று இவா்கள் வேட்பு மனுவில் கைச்சாா்த்திட்டுள்ளனா். வாஸ் குணவா்த்தன, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா ஆகியோறுக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்படவில்லை

Read More

தேசிய பட்டியலில் பௌஸி – மைத்திரியினால் பரிந்துரை

சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பௌஸி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் முன்னள் அமைச்சர் பௌஸி நியமிக்கபட்டுள்ளதாக சுதந்திர கட்சியிடமிருந்து ஜப்னா முஸ்லிமுக்கு தகவல்கள் கிடைத்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பௌஸி தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். வழமையாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பௌஸி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஹம்பாந்தோட்டை மக்களை மஹிந்த காட்டிக்கொடுத்து விட்டார் – சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களை மறந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் வீரகெட்டியவில் இன்று இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

மஹிந்தவுடன் ஒரே மேடையில் இருக்கமாட்டேன் – மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தாங்கள் பெரும் கவலையடைவதாகவும் மனம் குழம்பியுள்ளதாகவும் முன்னணி சிவில் அமைப்பின் பிரதிநிதிக் குழுவொன்று ஜனாதிபதியிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி காரியாலயத்தில் கடந்த  இரவு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் காமினி வியங்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி. சமன் ரத்னபிரிய, ஜோஸப் ஸ்டாலின், தர்மசிறி பண்டாரநாயக்க, ரவி ஜெயவர்தன ஆகியோர் உட்பட தம்பர அமில தேரரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின்…

Read More

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு சீனா ஆதரவு

ஐ.நா. சபையில் அதிகாரமிக்க பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள்தான் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்பது இந்தியாவின் நெடுநாளைய விருப்பம். இந்த விஷயத்தில் இப்போது இந்தியாவுக்கு சீனா திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷியாவில் உள்ள உபா நகரில் நேற்று முடிந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இது தெரியவந்துள்ளது. அந்த பிரகடனத்தில், “சர்வதேச விவகாரங்களில் பிரேசில், இந்தியா, தென்…

Read More

நீதிமன்றில் ஆஜராகாத பொது பலசேனா பிக்குகளுக்கு பிடியாணை

கடந்த அர­சாங்­கத்தில் கைத்­தொழில் அமைச்­ச­ராக  ரிஷாத் பதி­யுத்தீன் இருந்த போது அவ­ரது  அமைச்­சிற்குள் பலாத் கார­மாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்­பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் இரு பிக்­கு­களை கைது செய்ய நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. இச்­ச­மப்வம் தொடர்பில் ஏற்­க­னவே  குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பிக்­கு­மார்கள்  பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், தொடர்ச்­சி­யாக வழக்­கு­க­ளுக்கு ஆஜ­ரா­காத 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்­தேக நபர்­க­ளான பிக்­கு­க­ளையே கைது செய்ய…

Read More

இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை

இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை இஸ்லாத்தை ஏற்றபோது பெற்ற மனஅமைதி இன்னும் விலகவில்லை இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது. லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர். இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள். அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய…

Read More

இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க் கிருமிகள்!

இந்திய ரூபாய் நோட்டுகளில் அதிக ளவில் நோய்க் கிருமிகள் இருப்பதாகப் புதிதாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகள், அதிக அளவில் நோய்க் கிருமி கடத்திகளாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அறிவி யல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் `இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி’ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை ஆராய்ந்தனர். இதற்காக…

Read More