Headlines

ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது நோக்கம்: மைத்திரி




2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது அரசின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹலால் வரியின்றி வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க முடியாது என கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இருந்து வந்த கருத்து இந்த நாட்டை மிகப்பெரும் தேசிய அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் எனவே ஹலால் வரி வருமானத்தை நீக்கி திறைசேரியை பலப்படுத்துவதை தமது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதி செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று ஜா-எல நகரசபை மைதானத்தில் நடைபெற்ற “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாதத்தைப் பிரகடனம் செய்தல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். tksou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *