Headlines

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று  நள்ளிரவு 12.00 மணியுடன் பூர்த்தியடையும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர்  மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நேரடியாகவோ தபால் மூலமாக கிடைக்கப் பெறும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.தே.க – அ.இ.ம.கா  கூட்டணி: மட்டக்களப்பு மக்கள் வரவேற்பு

நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றது இதில் முதன்மை வேட்பாளராக உள்ள முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியையும் அவருடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நேற்று (13.07.2015) வரவேற்பு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு ஜூம்ஆ பள்ளிவாயல் ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்,வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல், மீறாவோடை,…

Read More

மனித நேயம் கொண்ட ஒரு தலமையின் கீழ் போட்டியிடுவதையிட்டு பெருமையடைகின்றோம்

அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். பிரமான்டமான வாகனத் தொடர் அணியாகச் சென்று அக்கட்சியன் பிரதம வேட்பாளராகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட் மற்றும் வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் அம்பாரை…

Read More

அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை உள்ளது -S.M.M.இஸ்மாயில்

எம்.சி.அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று முஸ்லிம் அரசியலில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்திக்கின்றது. அதிலும் முஸ்லிம்கள் செரிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை. அதற்காகத்தான் முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் தகுதியான பலம்வாய்ந்த அணியின் மூலம் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் எமது கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றும். என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்….

Read More

அன்வர் இஸ்மாயில் எனும் சிங்கத்தின் இழப்பை ஈடுசெய்வோம்

அஸ்லம் எஸ்.மௌலானா இன்று இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாச்சாரம் தோன்றியுள்ளது, நல்லாட்சியின் அத்தனை சிறப்புக்களையும் சுவைக்கின்ற தாய் நாடாக இலங்கை எதிர்காலத்தில் பயணிக்க தயாராகி விட்டது. ஆனால் நமது பிராந்தியத்தில் மாத்திரம் இதன் பெறுபேறுகளை காண முடியாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை எமது சமூகம் உணர்ந்து மாறாத வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இவ்வாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.முஹம்மது இஸ்மாயில் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்…

Read More

தோல்வியடையச் செய்து மஹிந்தவை அனுப்பி வைப்போம்

இம்முறை விசேட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய முதன்மை வேட்பாளர் சமூகமளிக்க வில்லை. குறைந்தளவு வேட்பு மனுத்தாக்குதலுக்காவது மாவட்ட முதன்மை வருகை தர வேண்டும். இது குருநாகல் மக்களுக்கு சொல்லுகின்ற ஒரு நல்ல செய்தியாகும். இந்தப் போட்டி சுத்தமானவர்களுக்கிடையேயும் அசுத்தமற்றவர்களுக்கிடையே நிலவும் போட்டியாகும் .சுத்தமுடையவர்கள் நல்லாட்சியை வழிநடத்திச் செல்பவர்கள். அசுத்தமான அணியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் அணியிலுள்ள ஏனையவர்களுமாகும். இந்த தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்திருப்பது கடந்த காலத்தில் கடுமையான ஊழல்…

Read More

விஷேட துஆ பிரார்த்தனை

அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.​ முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்ட இவ்துஆப் பிரார்த்தனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகர் அப்துல் மஜீட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில்…

Read More

இன்று மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை

பொதுத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரை நேற்று (13) நிகழ்த்தப்படவிருந்த போதும், இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்காவில் சர்ச் கட்ட நிதியுதவி செய்த முஸ்லிம்கள்!

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வெள்ளையின மக்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இன மோதல் வெடித்ததை நாம் படித்திருக்கலாம். பல உயிர்கள் இதில் பலியாயின. அதோடு வெள்ளையின குண்டர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவருக்கு சொந்தமான சர்ச்களை எரித்து விட்டனர். இன்று வரை அது சரி செய்யப்படாமல் இருந்தது. இதனை கண்ணுற்ற மூன்று இஸ்லாமிய அமைப்புகள் சர்ச்களை கட்டித்தர முடிவு செய்தன. அந்த அமைப்பின் பெயர்கள் முறையே Ummah Wide, Muslim Anti-Racism Collaborative and Arab American Association…

Read More

றிஷாதின் அம்பாறை வருகை! கதிகலங்கிய மு.கா.

நஸீர் -அட்டாளைச்சேனை அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான றிஷாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பு மனுவை இரத்துச் செய்வதற்கு இன்று எடுக்கப்பட்ட முயற்சியின் மூலம் அந்த சதித் திட்டம் அம்பாறை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாதினால் உருவாக்கப்பட்ட ஹூனைஸ் பாறுக் – இனவாதிகளோடும் இனவாத…

Read More

சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாத நோய்!

புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. •∗ காச நோய் •∗ நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் •∗ இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய் •∗ புற்று நோய் •∗ ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள் .இந்நிலையில் புகைப்பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 22…

Read More

ஹிஜாபுடன் பாரளமன்றத்திற்குள் நுழைந்த ரவ்ளா!

நீங்கள் படத்தில் பார்க்கும் இருவரும் உடன் பிறந்த சகோதிரிகள் ஒருவரின் பெயர் மர்வா இன்னும் ஒருவரின் பெயர் ரவ்ளா துருக்கியை சார்ந்தவர்கள் இதில் மர்வா என்பவர் 1999 ஆம் ஆண்டு இஸ்தான்புல் நகர துணை மேயராக தெரிவு செய்ய பட்டார் அவர் ஹிஜப் அணிந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதர்கு அன்றைய துருக்கியின் அதிபராக இருந்த சுலைமான் என்ற அயோக்கியன் தடைவிதித்தான் இதனை தொடர்ந்து மர்வா ஹிஜாபுக்காக போராட தொடங்கினார் இதனால் துருக்கியில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள்…

Read More