கிணற்றில் விழுந்த இளைஞன் இரு தினங்களின் பின் உயிருடன் மீட்பு
வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட பொலிஸார் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது 33) என்கின்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் இளைஞர் கடந்த 8ஆம் திகதி இரவு இப்பாழடைந்த கிணற்றிற்கு அருகாமையால் நடந்து செல்கையில் தற்செயலாக வீழ்ந்துள்ளார். இரண்டு தினங்களும் நீராகரம் இன்றி மிகவும் கஷ்டமான நிலையை அடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இரண்டு தினங்களாக குறித்த நபர் காணாமல்போனதையடுத்து…
