Headlines

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கை தயாரிப்பு

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கொள்கையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்தும் தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

வித்தியா படுகொலை ; பதட்டம் குறித்தும் அறிக்கை தயார்

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் குறித்த பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலமைகள்  தொடர்பிலான விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 13 ஆம் திகதி  காணாமல் போன வித்தியா 14 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து புங்குடுதீவில் பதற்ற நிலை நீடித்தது. இது குறித்த அறிக்கையினை பெற விசேட குழுவொன்று பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் படுகொலையுடன்  தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்…

Read More

வெள்ளை மாளிகையை அலங்கரித்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ! (படங்கள் இணைப்பு)

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை நேற்றய தினம் நோன்பாளிகளால் நிரம்பி வழிந்தது முஸ்லிம்களை கவுறவபடுத்தும் விதத்தில் நோண்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றிர்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்கவில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் முக்கிய முஸ்லிம் தொழில் அதிபர்களும் அரசு அதிகாரிகளும் அழைக்க பட்டிருந்தனர் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறும்போது தங்கள் ஆண்மீக உணர்வுகளை முஸ்லிம்கள் புதுப்பித்து கொள்ளும் இந்த நல்ல நேரத்தில் நாம்…

Read More

2020 ஒலிம்பிக்ஸில் புதிய விளையாட்டுகள்?

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளாக, புதிதாக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ள விளையாட்டுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெற்ற பிறகு எந்தெந்த விளையாட்டு அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் என்பது மேலும் தெளிவாகும். அவ்வகையில் தற்போது எட்டு விளையாட்டுகள் முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வாகியுள்ளன. முதல்கட்ட பரிசீலனையில் பேஸ்பால்/சாஃப்ட்பால், பௌலிங், கராத்தே, ரோலர் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட் க்ளைம்பிங், ஸ்குவாஷ், சர்ஃபிங், வூஷூ ஆகிவை தேர்வாகியுள்ளன. ஸ்னூக்கருக்கு இடமில்லை அதேவேளை ஸ்னுக்கர்…

Read More

மஹிந்த அரசு  நோன்பு காலங்களில் கிறீஸ் பூதங்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தியது!

‘கடந்த நோன்பு காலங்களில் மஹிந்த அரசாங்கம் கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை சீர்குலைத்து அச்சுறுத்தியதை எவரும் மறந்து விட முடியாது’ என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார். ‘மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்காக வீதிகளில் இறங்கி மண்டியிடுவதானது அவருடைய பதவி மோகத்தையே காட்டுகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாய்ந்தமருதில் பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

சவூதி – ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளது. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளை சந்திப்பதிலும் இருநாடுகளும்…

Read More

“அலி பாபாவின் திருடர்கள், அரசை கைப்பற்ற முயற்சி”?

அலி பாபாவின் திருடர்கள் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆட்சி செய்தவர்கள் இவ்வாறு ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட திருடர்கள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மரத்தை வெட்டி விட்ட போதிலும் வேர்கள் இன்னமும் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கப்படுவதாகத்…

Read More

9 பேர் இஸ்லாத்தை தழுவினர் ! (படங்கள் இணைப்பு)

– அப்துல் ஹமீது ஸாலிஹ் – இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று  முன்தினம்  (22.06.15) இஃப்தார் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து அல்மனா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகை நடைபெற்றது. அதன்பிறகு, பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 9 கிறித்தவ சகோதரர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கலிமா ஷஹாதாவை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்றனர். மக்ரிப் தொழுகைக்கு வந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு சலாம்…

Read More

நூடில்ஸில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் உரிய பரிசோதனை – றிஷாத் பதியுதீன்

இலங்கையில் உள்ள நூடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தியாவில் மெகீ நுாடில்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,அதனை இலங்கைக்குள் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார். நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –…

Read More

ஐ. தே. க. ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு – கபீர் ஹாசிம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க. ஆட்சியின் கீழ் 20 தாவது திருத்தத்தை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கி நிறைவேற்றுவதாக ஐ. தே. க செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். மக்கள் ஆணையுடன் உருவாகும் அடுத்த ஐ. தே. க. ஆட்சியில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

அமைச்சர் றிஷாதின் 20 தொடர்பிலான உரையின் தொகுப்பு

( தொகுப்பு-அபூ அஸ்ஜத் ) பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம்,   கௌரவ குழுக்களின் பிரதி தலைவர் அவர்களே !  இன்று அறிமுகம் செய்ய முயற்சிக்கின்ற தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ முறையினுல் தொகுதிவாரித் தேர்தல் முறையாகும்.  வர்த்தமானி பிரகடனத்தின் படி 200 பிரதிநிதிகள் மாவட்ட விகிதசரததினுாடாகவும், 37 பேர் தேசிய பட்டியலினுாடாகவும்  நியமிக்கப்பட பிரேரிக்கப்படடிருகின்றது. அதே நேரம் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படுகின்ற 200 பேர்களுள் தொகுதி ரீதியாக தெரிவுசெய்யபடுகின்ற 145 பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவர்.  அதாவது ஒரு…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி – ஜனாதிபதி சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியினால் பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய சுதந்திர வர்த்தக வலயமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியல் பூங்காவும் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாகபூர்த்தியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் அழைப்பின் பேரில் வருகை தந்த…

Read More