Headlines

சவூதி வாழ் சொந்தங்களுக்கு ஓர் அறிவித்தல்!

எம். ஹூஸைன்கனி, ரியாத். சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கைரேகை பதிவுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள தகவல் தாங்கள் அறிந்ததே. தற்போது அது துரிதப் படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் (பெண்களும் குழைந்தைகளும்) பாஸ்போர்ட் (ஜவஸாத்) அலுவலகம் சென்று கூட்ட நெரிசலில் தவிப்பதாக தகவல் அறிந்தோம். சவூதி பாஸ்போர்ட் துறையினரால் நாடு முழுதும் ஷாப்பிங் மால் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் கைரேகைப் பதிவு செய்யும் இடங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. பெண்களும், குழந்தைகளும் அங்கு சென்று…

Read More

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மண்மேடுகள் சரிந்து வீழ்வதற்கும், மண்சரிவுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக…

Read More

அபாயாவில் வலம் வந்த ஆண் சவூதியில் கைது

புனித நகரமான மக்காவில் உள்ள ஜாரனா மஸ்ஜிதில் இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய உடையான ‘அபயா’ வை அணிந்து கொண்டு வலம் வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மஸ்ஜிதிற்கு வந்திருக்கும் பெண்களில் ஒருவர் அடிக்கடி கழிவறைக்கு செல்வதாகவும் விசித்திரமாக நடந்து கொள்வதாகவும் மஸ்ஜிதில் உள்ள சிலர் பொலிஸில் புகாரளித்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணைக் கண்காணித்த பொலிஸார் அவர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்றதைக் கவனித்தனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஹபாயாவை அணிந்துக் கொண்டிருப்பதைக்…

Read More

சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமனம்; நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் இலங்கை சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்.

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பு வெளியிடப் போகும் -“மஹிந்த ராஜபக்ஸ ஊழல்” நூல்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை நூல் வடிவல் ஆவணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த தகவல் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பிற்கு அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்இ ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நூல் வெளியிடப்பட உள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த…

Read More

Candy Crush விளையாடியதால் கை பெருவிரல் தசைநார் பாதிப்பு!!!??

அமெரிக்காவில் உள்ள ஒருவர், தன் ஸ்மார்ட்போனில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக ‘கேண்டி கிரஷ்’ விளையாடியதால் அவரின் இடது கை பெருவிரல் தசைநார் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான கட்டுரை அமெரிக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘லைவ் சயின்ஸ்’ எனும் பிரபல மருத்துவ அறிவியல் ஆய்விதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் கேண்டி கிரஷ் விளையாடிய ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறப்பட்டிருந்தது….

Read More

மஹிந்த பாவமாம்; விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம், போராட்டத்தில் சிலர் தூக்கம். ( அனைத்து படங்களும் இணைப்பு)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்படவுள்ள விசாரணையை மீளப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை மீளப் பெறும் வரை நாடாளுமன்றத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை நாடாளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும்…

Read More

அரசாங்க வைத்தியர்களுக்கான மாதாந்த விஷேட அலவன்ஸ் அதிகரிப்பு

அப்துல்லாஹ் அரசாங்க வைத்தியர்களுக்கான மாதாந்த விஷேட அலவன்ஸ் ஏப்ரல் மாதம் தொடக்கம் ரூபா 35 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக இருந்தது. இது தொடர்பான சுற்றறிக்கை அந்த அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் ஆர் பி திஸநாயக்காவினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் அதிகரித்த கொடுப்பனவு பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய சுற்றறிக்கையின்படி ஏப்ரல் மாதம் தொடக்கம் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாவுடன் மொத்தம்…

Read More

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று (21) பாராளுமன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் (22) இவ்விவாதம் நடைபெறவுள்ளது. நேற்று (20) பாராளுமன்றில் நடைபெறவிருந்த விவாதம் கட்சித்தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இன்றைக்கு பிற்போடப்பட்டது.

Read More

நைஜீரியாவைத் தாக்கி வரும் மர்ம வியாதி!:18 பேர் பலி

தென்மேற்கு நைஜீரியாவில் அண்மைக் காலமாக ஓர் மர்ம வியாதி தாக்கி வருவதாகவும் இதனால் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் இதன் காரணத்தை அறிய முடியாது சுகாதார அதிகாரிகள் திகைத்துப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வியாதியில் சம்பந்தப் பட்டு இறந்தவர்கள் அனைவவும் ஏப்பிரல் 13 ஆம் திகதி முதல் நைஜீரியாவின் ஒன்டோ மாநிலத்திலேயே பாதிக்கப் பட்டவர்கள் என ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எபோலா போன்று அதிகபட்ச அச்சுறுத்தலுடன் மிக வேகமாக இந்த நோய் பரவி…

Read More

நீதிமன்ற தடையையும் மீறி நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்ரம் விதித்துள்ள தடையையும் மீறி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

யாழ். ஜனாதிபதிக்குரிய மண்டபத்தை யாழ்.பல்கலைக்கு வழங்குக – வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு

ஊடகப்  பிரிவு  கடந்த முப்பது வருடங்களாக வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் போரினாலும் வன்செயலினாலும் தமது கல்வியில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அண்மையில் வடமாகணத்துக்கு விஜயம் செய்துள்ள கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்காக விசேட கல்விக் கொள்கை ஒன்றை வகுத்து மாணவர்களின் கல்வி நிலையை பழைய நிலைக்கு கொண்துவர வேண்டும் எனவும் இது சம்பந்தமாக கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை…

Read More