Headlines

பம்பலப்பிட்டி பெண் கொலை: இருவர் கைது

பம்பலபிட்டி சென்.பீட்டர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய 44 வயதான பெண் ஊழியரின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மேற்படி பாடசாலையின் காவலாளி எனவும் மற்றையவர் பாடசாலைக்கு வந்து செல்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். பாடசாலையின் களஞ்சிய அறையிலிந்து அந்த பெண்ணின் சடலம் ஏப்ரல் 19ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

யெமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சவூதி இளவரசர் ஆறுதல்!

யெமனி ல் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையில் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியா இளவரசர் பைசல் பின் காலித் மருத்துவமனைக்கு சென்று…

Read More

ஜித்தா -மக்கா -மதினா புனித நகரங்களுக்கிடையே அதிவேக ரயில் Haramain எக்ஸ்பிரஸ் தயார் நிலையில் உள்ளது!

அதிவேக ரயில் ஜித்தா மூலம் மக்கா மதீனா இணைக்கும் மற்றும் மதீனாவிற்க்கும் Rabigh சென்றடைகிறது. “ஒத்திகை 300 கி.மீ. ஒரு மணி நேரம் அடையும் ஒரு வேகத்தில் கோடை வரை தொடரும்,” சவுதி ரயில்வே அமைப்பு (SRO:) முகம்மது அல்-Suwaiket தலைவர் கூறினார். அவர் முதல் ரயில் ஏற்கனவே இரண்டு ஓடிவரும், 417 பயணிகள் மற்றும் ஒரு pantry கார் வரை இணங்கிப் 13 வண்டிகள் கொண்ட இராச்சியம் வந்து கூறினார். “இந்த ராஜ்ய வரலாற்றில் மிகப்பெரிய…

Read More

துபையில் டிராபிக் விதிகளை மீறாத 2 டிரைவர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசளித்த துபாய் போலீஸ்.!

துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள்…

Read More

பாலைவன நிலத்தில் கிடைத்த வெற்றி… கத்தார் தலைநகர் தோஹாவில் நெல் அறுவடைக்குத் தயார்.

அபூ சுமைய்யா கேரள விவசாய ஆர்வலர்களால் Al Dosari Park shahaniya வில் சிறிய நிலப் பரப்பில் முதலாவதாக செய்யப் பட்ட நெற் பயிர் செய்கை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெற் பயிர் செய்கை நீர் வளமுள்ள நிலத்திலே (water rich soil ) செய்கை பண்ணப் படுவது வழக்கம் இவர்கள் பாலைவன நிலத்தில் வெற்றிகரமாக நெற் பயிர் செய்து வெற்றி கண்டிருகின்றார்கள்.

Read More

12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கு கப்பலில் அடைக்கலம் தருகிறது கட்டார்

வரும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக நடத்த கத்தார் அரசு ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இந்த போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக மிதக்கும் ஓட்டல்களை அமைக்க பலரும் ஐடியா கொடுத்த போது முதலில் அதை நிராகரித்து விட்ட கத்தார் அரசு இப்போது மீண்டும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, போட்டியை காணவரும் 12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கும் மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களில் அடைக்கலம் அளிக்க…

Read More

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதன்

விசித்திரங்களின் தாய் நாடான அமெரிக்காவில் மற்றுமொரு விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலரடோ மாநிலத்தில் கைதுப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதனை(?) போலீசார் பிடித்து வைத்துள்ளனர். கொலரடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையால் ‘கம்ப்யூட்டரைக் கொலை செய்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த திங்கள் அன்று கொலரடோ நகர்ப்புற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லூகாஸ்(37) என்ற நபரைப் பிடித்து…

Read More

புள்ளிவிபரத்திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு!

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே  புள்ளி விபரத் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய கட்டடத் திறப்பு விழாவின் பின்னர் புள்ளி விபரத்  திணைக்கள  உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் …

Read More

சிறுவர்களை பாதுகாக்க கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்!

திருமலை அரசாங்க அதிபர்  திருகோணமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் 21.04.2014 மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதுடன் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார நேற்று (21) தெரிவித்தார். அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற திருமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

Read More

தொழிற்சந்தையும் கல்வி கண்காட்சியும்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு…

Read More

தாமரை கோபுரம் இந்தியாவை கண்காணிக்கும் திட்டம் அல்ல – சீனா மறுப்பு

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய் என்ற ஆய்வாளர், இலங்கையில் தாமரை கோபுரத் திட்டத்தை நிறைவு செய்ய இடமளித்தால் அது இந்து சமுத்திரத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும்…

Read More

லலித் வீரதுங்கவிடம் நிதி மோசடி பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்க மீது நிதி மோசடி குற்றச்சாட்டில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More